அரசு வங்கியின் மூலமே கல்வி உதவி தொகையை பயனாளிகளுக்கு வழங்கி வருவதால், ஒவ்வொரு பயனாளிகளும் வங்கி கணக்கு எண் பெறுவது அவசியமாக இருந்து வருகிறது.
இதற்காக வங்கிகளுக்கு சென்று புதிதாக வங்கி கணக்கை துவக்கி வருகின்றனர். இந்த பணிகளுக்காக நமதூர் நடுத்தெரு வாய்க்கால் தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியின் எதிரே அமைந்துள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தில் நமதூரை சேர்ந்த சேக் அப்துல்லா அவர்கள் பொதுமக்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்காமல் இலவசமாக புதிதாக வங்கி கணக்கு துவங்க ஏற்பாடு செய்து வருகிறார்.
தங்கள் பிள்ளைகளுக்கு அரசிடமிருந்து கல்வி உதவி தொகை பெற நினைக்கும் பெற்றோர்கள் தேவையான ஆவணங்களுடன் இவரை அணுகி பயனடையலாம்.
மேலும் விதவை - முதியோர் - மாற்றுத்திறனாளி - உலமா ஆகியோர் அரசிடமிருந்து பெரும் உதவித்தொகைக்கு தேவைப்படும் வங்கி கணக்கை இலவசமாக ஏற்படுத்தி கொடுக்கிறார்.
பொது நல சேவை பாராட்டக்குரியது - வாழ்த்துக்கள்
ReplyDelete