.

Pages

Wednesday, June 25, 2014

பட்டுக்கோட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் !

தஞ்சை மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.பாசன கால்வாய் ,ஏரி,குளங்களை மராமத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பட்டுக்கோட்டையில் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பாக செவ்வாய் அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
             
ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் ஏ.கோவிந்தசாமி தலைமை வகித்தார்.விவசாயிகள் சங்க மாவட்ட
துணைச்செயலாளர் வி.கே.சின்னத்துரை ,விவசாயிகள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் அட்வகேட் வி.கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
         
விதொச மாவட்டத்தலைவர் ஆர்.வாசு,       பட்டுக்கோட்டை சிபிஎம் ஒன்றியச்செயலாளர் எம்.செல்வம் ,திருவோணம் சிபிஎம் ஒன்றியச்செயலாளர் கே.ராமசாமி ,வி.ச ஒன்றியத்தலைவர் கே.சோமசுந்தரம் ,கே.பாலசுப்ரமணியன் ,மதுக்கூர் வி.ச ஒன்றியச்செயலாளர் ஏ.என்.வேதாச்சலம் ,எம்.அய்யாவு ,பேராவூரணி எம்.எஸ்.கருப்பையா ,ஆனந்தராசு ,திருவோணம் கே.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் விளக்கவுரையாற்றினர்.
             
ஆர்ப்பாட்டத்தில் ," தஞ்சை மாவட்டத்தை வறட்சி பகுதியாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும்.பாசன கால்வாய்கள் ,மதகுகளையும் சீர்செய்து கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும்.பாசன ஏரி,குளங்களை ஆழப்படுத்தி ,தூர்வாரி ,மண்ணை அப்புறப்படுத்தி ,நீரை தேக்கி வைக்க ஏற்பாடு செய்திடு ,கடைமடை பாசன பகுதியில் அமைந்துள்ள ஆழ்குழாய் கிணறுகளுக்கு மின் இணைப்பு வழங்கும் போது சீனியாரிட்டி பார்க்காமல் சிறப்பு முன்னுரிமை அடிப்படையில் வழங்கிடு.பழைய கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்து ,இவ்வாண்டிற்கு புதிய கடன் வழங்க ஏற்பாடு செய்திடு.மாவட்டத்தில் உள்ள காட்டாறுகளின் குறுக்கே தேவையான இடங்களில் படுக்கை அணை ஏற்படுத்தி நிலத்தடி நீரினை பாதுகாத்திடு ,விவசாயத்திற்கு தரமான விதை,உரம் ,பூச்சிக்கொல்லி ஆகியவற்றை மானிய விலையில் வழங்கிடு .நூறு நாள் வேலைத்திட்டத்தில் அரசு நிர்ணயித்த கூலி ரூபாய் 167/- ஐ குறைவின்றி வழங்கிடு .நூறு நாள் வேலையை அனைத்து பகுதி மக்களுக்கும் ஷிப்ட் முறையில்லாமல் தினமும் வழங்கிடு' என்பதை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர் .
       
பட்டுக்கோட்டை ,மதுக்கூர் ,திருவோணம் ,பேராவூரணி,சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 30 பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

செய்தி : எஸ்.ஜகுபர்அலி ,
பேராவூரணி.



No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.