.

Pages

Tuesday, June 24, 2014

ரோட்டரி சங்க பதவியேற்பு விழா !

பேராவூரணி ஜூன்-24;
பேராவூரணி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா,நடேச குணசேகரன் திருமண மண்டபத்தில் திங்கட்கிழமை அன்று நடைபெற்றது.
               
2013-14 தலைவர் எஸ்.நாகராஜன் வரவேற்றார்.செயலாளர் முகமது முஸ்கீர் செயலறிக்கை வாசித்தார் .
   
பேராவூரணி ரோட்டரி சங்கம் (RI dist 2980-club no;83208) ஐந்தாம் ஆண்டு(2014-15) புதிய நிர்வாகிகளாக தலைவராக என்.பி.நீலகண்டன் ,செயலாளராக என்.நிசோனன்,பொருளாளரக சி.ஏ.பாஸ்கரன் ஆகியோர் பதவியேற்று கொண்டனர்.
     
ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் என்.கோவிந்தராஜ் தலைமை விருந்தினராக பங்கேற்றார்.துணை ஆளுநர் டாக்டர் சி.வி.பத்மானந்தன் புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்து உரையாற்றினார்.
         
புதிய செயலாளர் என்.நிசோனன் நன்றி கூறினார் .விழாவில் வட்டாட்சியர் இரா.கிருஷ்ணன் ,மருத்துவர்கள் ஜெயபால் ,செல்வி,தொழிலதிபர் எஸ்.டி.டி.சிதம்பரம் ,எஸ்.டி.டி.வெங்கடேசன் ,சரவணா ஜூவல்லர்ஸ் உரிமையாளர் என்.பன்னீர் செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.
             
ரோட்டரி நிர்வாகிகள் டி.ஆர்.முருகேசன் ,கே.பி.எல்.ரமேஷ் ,என்.கௌதமன் ,கே.ஆர்.கிருஷ்ணன் ,பி.அஜ்மீர் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர் .

செய்தி : எஸ்.ஜகுபர்அலி ,
பேராவூரணி.

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.