.

Pages

Wednesday, August 6, 2014

ஒயின் ஷாப் அருகே குடிபோதையில் பாலத்தின் மீது மோதியதில் இரு வாலிபருக்கு பலத்த காயம் !

அதிரை பட்டுக்கோட்டை சாலையில் கடந்த வருடம் புதிதாக டாஸ்மாக் ஒயின் ஷாப் கடை திறக்கப்பட்டது. பிரதான சாலையை ஒட்டி அமைந்திருப்பதால் அதிரை மற்றும் அதனை சுற்றி வசிக்ககூடிய குடிமகன்கள் அங்கிருந்து மது அருந்திவிட்டு போதையில் சாலையை கடந்து செல்வார்கள். இச்சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன. எந்நேரமும் பரபரப்பாக காணப்படும் இச்சாலையில் விபத்துகளும் அவ்வப்போது ஏற்படுவது உண்டு.

நேற்று முன்தினம் மாளியாக்காட்டை சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க இரண்டு வாலிபர்கள் மது அருந்திவிட்டு சாலையை கடக்கும் போது நிலை தடுமாறி அருகில் இருந்த பாலத்தின் மீது மோதியதில் இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. அச்சாலை வழியே சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். காயங்கள் ஏற்பட்ட இருவரும் பட்டுகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து அதிரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செய்தி மற்றும் படங்கள் :
ராஜா முஹம்மது  

   

2 comments:

  1. ஸஹீஹுல் புகாரி 80. 'கல்வி மக்களிடமிருந்து மறைந்து விடுவதும் அறியாமை நிலைத்து விடுவதும் மது அருந்தப் படுவதும் வெளிப்படையாய் விபசாரம் நடப்பதும் மறுமை நாளின் அடையாளங்களில் சிலவாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.
    Volume:1,Book:3.

    ReplyDelete
    Replies
    1. அறியாமை என்பது ஆட்சியாளரான தமிழக முதல்வரையே எடுத்துக்கொள்ள
      வேண்டும்.

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.