கடந்த நோன்புப் பெருநாள் அடுத்த நாள் அதிரையின் சில நண்பர்கள் ஒன்றுகூடி 'மந்தி விருந்து' என்ற பெயரில் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அதிரையின் சில தளங்களில் இது செய்தியாகவும் பதியப் பட்டது.
இப்படி ஒரு விருந்து அவசியமா ? என்றும் இது வீண் செலவு என்றும் சிலரால் விமர்சிக்கப் பட்டன. அளவுக்கு அதிகமாக தயார் செய்யப்பட்டு மிகுதியான உணவாக, குப்பையில் கொட்டப்படும் சூழலில் அது ஆடம்பரமான விருந்தாகக் கருதப்படும். மாறாக தயார் செய்யப்பட்ட உணவு முழுவதும் மீதமின்றி பறிமாறப்பட்ட நிலையில் இது எப்படி ஆடம்பர விருந்தாகவோ அல்லது வீண் செலவாகவோ கருதப்படும் ?
இந்த விருந்தில் கலந்துகொண்டவர்கள் யாவரும் ஒரு வேலை சோத்துக்கே கஷ்டப்படும் கூட்டமல்ல. மாறாக அந்த மந்தி விருந்தை விட பல மடங்கு சுவையுடன் தங்களது வீட்டில் அன்றைய தினம் அவர்களால் தயார் செய்து அருந்தியிருக்க முடியும். ஆனால் அந்த விருந்தில் இத்தனை பேர் கலந்து கொண்டதன் மூலம், பெருநாள் விடுமுறையில் வெளிநாடுகளிலிருந்தும், வெளியூர்களிலிருந்தும் ஊர் வந்துள்ள சகோதரர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ள இந்த மந்தி விருந்து நிகழ்ச்சி ஒரு வாய்ப்பாக அமைந்ததை யாராலும் மறுக்க முடியாது.
ஒரு சிலரிடம் வேண்டுமென்றே கட்டாயப்படுத்தி பணம் வசூலித்து இந்த விருந்து நடத்தப் பட்டதாகவும் சில குற்றச் சாட்டுகள் உள்ளன. இதுவும் ஏற்றுக் கொளும் நிலையில் இல்லை. வேண்டுகோளின் அடிப்படையில், ஒரு சிலரால் மட்டும், விரும்பி தொகை வழங்கப் பட்டு, இந்த மந்தி விருந்து நடத்தப்படுவதை உணர முடிகின்றது.
மேலும் ஒரு சிலருக்கு நடந்த மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்துகொள்ள 'ட்ரீட்' வழங்குவது சர்வ சாதாரணம். இதனை இதுபோன்ற சூழ்நிலைகளில் நண்பர்கள் வாயிலாக பயன்படுத்திக் கொள்ளவும் இந்த மந்தி விருந்து நிகழ்ச்சி வாய்ப்பாக அமைகிறது.
மேலும் குறித்த இந்த விருந்தில் கலந்துகொள்ளாதவர்கள், ஒன்று அழைக்கப்படாதவர்களாக இருக்கும் அல்லது, அழைத்து நேரமின்மை காரணமாக வராதவர்களாக இருக்குமே தவிர இதனை எதிர் விமர்சனம் செய்தவர்கள் கூட கலந்துகொண்டு சிறப்பித்ததை காணமுடிந்தது.
மேலும் ஒரு குறிப்பிட்ட தெரு வாசிகளால் இந்த விருந்து நடத்தப்பட்டாலும், பிற தெருக்களில் உள்ள அவர்கள் சார்ந்த நண்பர்களையும் அழைத்து விருந்தோம்பல் செய்து நட்பு பாராட்டியதையும் இந்த விருந்தில் காண முடிந்தது. அதேபோல மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத எந்த உணவுவகைகளும் இந்த விருந்தில் பறிமாரப்படவில்லை.
ஆனால் இது ஒரு சாராருக்குள் மட்டும் பறிமாரப்படும் விருந்து என்பதால் இனி வரும் காலங்களில் ஏழை எளிய மக்களையும் அழைத்து இதுபோன்ற விருந்துகள் நடத்தப்படுமாயின் மேலும் இதுபோன்ற விருந்துகள் போற்றப்படும்.
எல்லோர் வாழ்விலும் சோகங்கள் உள்ளன. அது சொந்த விவகாரமாக இருந்தாலும் சரியே, அல்லது பாலஸ்தீன விவகாரம் போன்ற சர்வதேச அளவிலான விவகாரமாக இருந்தாலும் சரியே ! எனினும் சந்தோஷங்கள், துக்கங்கள் அவ்வப்போது நம்மை தொட்டுவிட்டுச் சென்றுகொண்டுதான் இருக்கின்றன. அதற்காக சந்தோசமான தருணங்களை ஒதுக்கித் தள்ளவோ, சோகங்களிலிருந்து தப்பவோ முடியாது அது அல்லாஹ்வின் நாட்டத்தைப் பொறுத்தது.
எனவே விருந்து இஸ்லாத்தில் ஆர்வமூட்டப்பட்ட செயலாகும். எனவே இஸ்லாத்தில் ஹராமாக்கப்பட்டதை விடுத்து, இஸ்லாம் அனுமதித்த எந்த வகையிலும் விருந்தோம்பலை ஆதரிப்பதில் தவறில்லை என்றே சகிப்புத்தன்மையுடன் எடுத்துக் கொள்ளவேண்டுமே தவிர எல்லாவற்றிலும் குறை காணும் மனப்போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.
http://adirainirubar.blogspot.in/2014/07/blog-post_28.html
ReplyDeleteஇன்று பெருநாள் (காலைச்) சாப்பாட்டில் கலந்து சிறப்பித்தவைகள் !
ReplyDeleteமலேசியா பரோட்டா
அண்ணபூர்னா இடியப்பம்
இந்தியா ஆட்டுக்கறி
ராஸல்கைமா பண்ணைக் கோழி
கேரளா சேமியா
சைனா கடப்பாசி
சவுதி வட்டிலப்பம்
பன்னாட்டு இனிப்பு புளிப்பு துணையுடன்...
அதிரையர்களாகிய எங்களை சுவைக்க வைத்தது இன்றைய சிறப்பம்சம்.
நான்கு சுவற்றுக்குள் நண்பர்களுக்குள் நடத்தப்படும் விருந்து பொதுவில் சர்ச்சையாவதில்லை. இதை புரிந்து கொண்டால் எவ்வளவு பெரிய மந்தியும் செரித்துவிடும்.
ReplyDeleteவிருந்தோம்பல் சமூக குற்றம் அல்ல.
ReplyDeleteஒவ்வொரு விருந்திலும் பன்னாவை மட்டும் கவனிப்பது கவலைக்கிடமாக உள்ளது.இவர்கள் விருந்தில் வேறுபாடு அதிகமாக பார்க்க படுகிறதேனோ
This all get together only. It is nothing wrong.
ReplyDelete