.

Pages

Friday, August 8, 2014

முத்துப்பேட்டையில் தமுமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் !

பாலஸ்தீனில் அப்பாவி மக்களை கொலை செய்யும் இஸ்ரேலை கண்டித்தும்,மத்திய அரசு இஸ்ரேலுடனான உறவை துண்டிக்க வலியுறுத்தியும் முத்துப்பேட்டை நகர தமுமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமுமுக நகர தலைவர் நெய்னா முகம்மது அவர்கள் தலைமையில் நடைபெற்றது மற்றும் தமுமுகவின் மாவட்ட துணை தலைவர் முகம்மது அலீம் , தமுமுகவின் மாவட்ட மாணவரணி செயலாளர் முகம்மது பைசல் ஆகியோர் முன்னிலை வகித்தார்,மமக நகர செயலாளர் தீன் முகம்மது அவர்கள் வரவேற்பு உரையாற்றினார்.

இதில் தமுமுகவின் தலைமை கழக பேச்சாளர் பழனி பாரூக் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் நாச்சிகுளம் தாஜுதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

இக்கூட்டத்தில் குத்துபுதீன் தமுமுக மாவட்ட செயலாளர்,மமக மாவட்ட செயலாளர் சீனி.ஜெகபர் சாதிக்,தமுமுக நகர செயலாலர் NMM சிமான்,தமுமுக நகர பொருளாளர் தாவுதுஷா,தமுமுக நகர துணை தலைவர் முகம்மது யாசீன்,முகம்மது நியாஸ் மமக நகர துணை செயலாளர்,முகமம்து நபீல் மருத்துவாணி செயலாளர் மற்றூம் கிளை நிர்வாகிகள்கலந்து கொண்டார்கள்.

இறுதியாக தமுமுக ஒன்றிய செயலாளர் ஜெகபர் சாதிக் அவர்கள் நன்றி உரையாற்றினார்.

செய்தி மற்றும் படங்கள் :
முத்துப்பேட்டை பைசல்








No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.