.

Pages

Sunday, March 8, 2015

முடங்கி வரும் மூங்கில் கூடை !

ஏழைகளின் மரம், பச்சை தங்கம் என்று அழைக்கப்படும் மூங்கிலின் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கவே செய்கிறது. மூங்கில் சார்ந்த பொருள்கள் ஏற்றுமதியில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கின்றது.

மூங்கிலில் பலதரப்பட்ட கூடைகள் முணையப்படுகிறது. தமிழ்நாட்டில் பல இடங்களில் இத்தொழில் நடைபெற்றாலும், தஞ்சை, திருச்சி போன்ற பகுதிகளில் குறிப்பிட்ட அளவில் நடைபெறுகிறது. இத்தொழிலுக்கு நல்ல வரவேற்பும் இருந்து வருகிறது.

இந்நிலையில், நாகரீக சுழற்சிக்கு ஏற்ப நகர்புறம் மற்றும் கிராமங்களில் வீட்டு உபயோகத்துக்கும், விவசாய தொழிலுக்கும் பிளாஸ்டிக் கூடைகள் சமீப காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் கூடைகள், மூங்கில் கூடைகளை விட விலை குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால், மலிவு விலையில் கிடைக்கும் பிளாஸ்டிக் கூடைகளின் விற்பனை அதிகமாகி உள்ளது. இதனால், மூங்கில் கூடை தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.

இதுகுறித்து, திருச்சியை சேர்ந்த கூடை தயாரிக்கும் குருசாமி கூறுகையில், "இந்த தொழிலை 20 வருடமாக செய்து வருகிறேன். மூங்கில் தட்டு, முறம், கூடை, பெட்டு, ஜாடு, காய்கறிக் கூடை, தட்டுக்கூடை, பொட்டி கூடை, விசிறி போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்கிறோம். சேலம், எடப்பாடி போன்ற இடங்களில் மூங்கில் கூடைகளை வாங்கி விற்பனை செய்கிறோம். ஒரு கூடை ரூ.150 முதல் ரூ.250 வரை விற்பனையாகும். சிறிய கூடைகள் ரூ. 60லிருந்து 130 வரை போகும். பனை ஓலை மூலம் செய்யப்படும் ஓலைப்பெட்டிகள் நல்ல விலை போகும். மூங்கில் சல்லடைகள் திருச்சி, திருவானைக்காவலில் இருந்தும், சாணித்தட்டு ஜெயங்கொண்டந்திலிருந்தும் வாங்கி விற்கப்படுகிறது. கோடை காலத்தில் மூங்கில் விசிறியும் செய்து விற்பனை செய்வோம்.

இருந்தாலும், தற்போது பிளாஸ்டிக் கூடைகள், தட்டுக்கள், அலங்கார ஜார்கள் என அனைத்தும் பிளாஸ்டிக் மயமாகிவிட்டதால், மூங்கில் கூடைகளின் மவுசு குறைந்து வியாபாரம் டல்லாக உள்ளது. பிளாஸ்டிக் பொருட்களின் ஆயுட்காலம் குறைவு. ஆனால், மூங்கில் கூடை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அப்படியே இருக்கும். பிளாஸ்டிக் பொருட்களின் வரத்து அதிகரிப்பு மற்றும் கூடை பயன்படுத்துவோரின்  எண்ணிக்கை குறைந்து உள்ளதாலும், தொழில் நலிவடைந்துள்ளது. இருப்பினும், தெரிந்த தொழில் என்பதால் இதை செய்து வருகிறோம்" என்றார்.

அதிக உழைப்பும், குறைந்த வருவாயும் கொண்ட இக்கலையானது, நெகிழிப் பொருட்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி வருகிறது. சுற்றுப்புறத்தை பாதுகாக்கும் வகையில் மூங்கில் பொருட்களின் பயன்பாடு அதிகரித்தால், தொழிலும் வளரும், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.

இரா.த. சசிபிரியா,
(மாணவப் பத்திரிகையாளர்)
படங்கள்: தே.தீட்ஷித்

நன்றி:விகடன்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.