தமிழக அரசின் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தும் வகையில் குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சேரும் மழைநீரை பைப் மூலம் குளத்திற்கு போய் சேரும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆங்காங்கே மின்விளக்குகள் ஏற்படுத்தவும் பைப் புதைக்கப்பட்டது. தற்போது இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் அனைத்து பணிகளும் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடை மேடையில் செக்கடி மேடு பகுதியை சுற்றி வசிக்கும் பொதுமக்கள் அதிகாலை நேரங்களில் மகிழ்ச்சியுடன் வாக்கிங் செல்கின்றனர். மக்தப் மதராஸா செல்லும் மாணவர்களும் குதுகலத்துடன் நடந்து செல்கின்றனர்.
சமீபத்தில் செக்கடி குளத்தின் இறுதி வடிவத்தின் மாதிரி புகைப்படங்கள் நமதூர் செக்கடி பள்ளியில் அனைவரின் பார்வைக்கு வைக்கப்பட்டது. உலகளவில் நவீன கட்டமைப்பிலும், தூய்மையிலும், சுகாதாரத்திலும் முன்மாதிரியாக திகழும் சிங்கப்பூரை போல செக்கடி குளத்தை சுற்றி காணப்படும் பகுதி தூய்மையிலும், நவீன கட்டமைப்பிலும் மாற இருப்பதை சுட்டிக்காட்டி மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர் அப்பகுதியினர்.
கோடை காலம் துவங்கியதை அடுத்து செக்கடி குளத்தின் நீர் மட்டம் நாளுக்கு நாள் வெகுவாக குறைந்து வருகிறது. நீர் மட்டத்தின் அளவை தக்க வைக்க அப்பகுதியை சுற்றி வசிக்கும் குடியிருப்புதாரர்கள் தினமும் ஒரு மணி நேரமாவது குளத்திற்கு செல்லும் வகையில் போர்வெல் தண்ணீர் திறந்துவிட ஏற்பாடு செய்ய வேண்டும் என்கின்றனர் அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள். மேலும் குளத்தின் அருகில் உள்ள செக்கடி பள்ளி, முகைதீன் ஜும்மா பள்ளி ஆகியவற்றின் ஹவூதிலிருந்து வெளியேறும் தண்ணீரையும் குளத்தில் விட ஏற்பாடு செய்யலாம். குளத்தில் ஆங்காங்கே பைப் புதைக்கப்பட்டுள்ளதால் குடியிருப்பு மற்றும் பள்ளிவாசல்களிலிருந்து வெளியேறும் தண்ணீரை இலகுவாக குளத்திற்கு கொண்டு செல்லலாம் என்கின்றனர்.
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை.
ReplyDeleteMasha allah
ReplyDelete//////செக்கடி குளத்தை நவீன படுத்தும் முயற்சியில் அப்பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கடந்த சில மாதங்களாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ///////
ReplyDeleteமேலே உள்ள வாசகம் செலவு செய்த நபரை குறிப்பிடாமல் பொது வார்த்தையாக உள்ளது?!
செப்பனிடும் செலவுகளை பொது வசூல் செய்யப்பட்டதாயும் தெரியவில்லை.
ஆகையால் அவர்களின் குடும்ப பெயரையாவது மக்களுக்கு தெரியப்படுத்துவதே செய்தியாளர்களாகிய உங்களின் கடமையாகும் அல்லா நற்செயலையும் நலவு செய்தோரையும் பிறருக்கு வெளிக்காட்டிய நன்மை உங்களுக்கு தருவான்
சிலவகை தருமங்கள் வெளிப்படையாக கொடுப்பதே சிறப்பு என அனுமதிக்கப்பட்டு இருக்கிறது
Masha Allah. ..........
ReplyDeleteAlmamthulillah
ReplyDeleteசிங்கபூரு மச்சான் செழிக்க செழிக்க வைச்சான்....அது என்ன சிங்கபூரு மட்டும் எல்லோருக்கும் உதாரணம் ..நாங்க இருக்கின்ற ஜப்பான் எல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரியலையா???
ReplyDeleteஇந்த வார்த்தையை முதலில் ஆரம்பிச்சது சேர்மன் தம்பி அஸ்லாம் தான் இருங்க உங்களை வைச்சுகிடுறேன் ????
//////செக்கடி குளத்தை நவீன படுத்தும் முயற்சியில் அப்பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கடந்த சில மாதங்களாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ///////
ReplyDeleteமேலே உள்ள வாசகம் செலவு செய்த நபரை குறிப்பிடாமல் பொது வார்த்தையாக உள்ளது?!
செப்பனிடும் செலவுகளை பொது வசூல் செய்யப்பட்டதாயும் தெரியவில்லை.
ஆகையால் அவர்களின் குடும்ப பெயரையாவது மக்களுக்கு தெரியப்படுத்துவதே செய்தியாளர்களாகிய உங்களின் கடமையாகும் அல்லா நற்செயலையும் நலவு செய்தோரையும் பிறருக்கு வெளிக்காட்டிய நன்மை உங்களுக்கு தருவான்
சிலவகை தருமங்கள் வெளிப்படையாக கொடுப்பதே சிறப்பு என அனுமதிக்கப்பட்டு இருக்கிறது//
நண்பன் சபீர் அவர்களின் இந்த கருத்தை நானும் வரவேற்கின்றேன் ...கரணம் தர்மத்திற்கு விளம்பரம் வேண்டாம் என்று இஸ்லாம் கூறுகின்றது .ஆனால் காலத்தின் கட்டாயம் ஒருவரின் தர்மசிந்தனயை பார்த்து மற்றவகளும் அதேபோல் தர்மம் செய்ய தூண்டபடுவது அவைகள் விளம்பரபடுத்த படும்போது மட்டுமே .
நேரில் கண்டதுபோல் இருக்கிறது..! மிக்க நன்றி அ நியுஸ்..
ReplyDeleteஇது போன்ற பொது மக்களுக்கு பயன் பெறும் வகையில் தனி ஒரு மனிதர் அல்லது
ReplyDeleteநிறுவனத்தார் செய்வது என்பது நல்ல விஷயம் ..அதனை செய்தியாக வெளியிடும் போது..அவர்கள் பெயரை குறிப்பிடுவதே நலம் ..தீன் எஸ்டேட் ...நிறுவனத்தாரின்
நல்ல முயற்சி என்பதை நான் அறிகிறேன் ..
நல்ல எண்ணம் கொண்ட அன்னிருவனத்தாரின் குடும்பம் இம்மையிலும் மறுமையிலும் நலம் பெற துஆ செய்வோம்
நல்லதை நல்லோரை என்றென்றும் வரவேற்பு அளிப்போம்
ReplyDelete