இந்நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் வெளியூர் ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 4000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அல் அமீன் ஜாமியா பள்ளி நிர்வாகத்தின் சார்பில் இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்ட ஊர் ஜமாத்தார்கள் கூட்டம் அல் அமீன் பள்ளியில் நடைபெற்றது. இதில் அதிரை அனைத்து ஜமாத் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதைதொடர்ந்து அதிரையின் முக்கிய பகுதிகளில் இயங்கக் கூடிய இஸ்லாமிய வர்த்தக கடைகளை எதிர்வரும் 24-05-2015 அன்று பகுதி நேரம் கடை அடைப்பு செய்து விழாவில் கலந்துகொள்ள வெளியூர்களிலிருந்து வருகை தரும் பிரமுகர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அன்புடன் கேட்டுக்கொண்டனர். இதற்காக இன்று மாலை ஒன்றிணைந்த ஊர் முக்கியஸ்தர்கள் பேருந்து நிலைய பகுதி, ஈசிஆர் சாலை, பழைய போஸ்ட் ஆபிஸ் சாலை, கடைத்தெரு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள வர்த்தக கடைகளுக்கு நேரடியாக சென்று வேண்டுகோள் விடுத்தனர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇந்தக் கூட்டத்திற்கு ஊரில் உல்ல எல்லா முக்கியஸ்தர்களும் வந்து கலந்து கொண்டார்களா?
நீங்கள் செய்வது எல்லாம் ஒகே.
ஊர் ஒற்றுமைக்கு என்ன செய்தீர்கள்?
அல்லது
என்ன செய்யப்போகின்றீர்கள்?
அல்லது
என்ன முடிவு எடுத்தீர்கள்?
ஒவ்வொரு மனிதனும், சக மனிதனாக நினைக்காதவரை யாரும் உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. மு. முஹம்மது அலியார்.