.

Pages

Wednesday, May 20, 2015

ரஹ்மானியா 100 ஆம் ஆண்டு நிறைவு விழா: பகுதி நேரம் கடை அடைப்பு செய்து சிறப்பிக்க வேண்டுகோள் !

அதிரையில் எதிர்வரும் 23-05-2015 , 24-05-2015 ஆகிய இரு நாட்கள் ரஹ்மானியா மதரஸா 100 ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் பட்டமளிப்பு விழா நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் வெளியூர் ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 4000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அல் அமீன் ஜாமியா பள்ளி நிர்வாகத்தின் சார்பில் இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்ட ஊர் ஜமாத்தார்கள் கூட்டம் அல் அமீன் பள்ளியில் நடைபெற்றது. இதில் அதிரை அனைத்து ஜமாத் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதைதொடர்ந்து அதிரையின் முக்கிய  பகுதிகளில் இயங்கக் கூடிய இஸ்லாமிய வர்த்தக கடைகளை எதிர்வரும் 24-05-2015 அன்று பகுதி நேரம் கடை அடைப்பு செய்து விழாவில் கலந்துகொள்ள வெளியூர்களிலிருந்து வருகை தரும் பிரமுகர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அன்புடன் கேட்டுக்கொண்டனர். இதற்காக இன்று மாலை ஒன்றிணைந்த ஊர் முக்கியஸ்தர்கள் பேருந்து நிலைய பகுதி, ஈசிஆர் சாலை, பழைய போஸ்ட் ஆபிஸ் சாலை, கடைத்தெரு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள வர்த்தக கடைகளுக்கு நேரடியாக சென்று வேண்டுகோள் விடுத்தனர்.

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.

    இந்தக் கூட்டத்திற்கு ஊரில் உல்ல எல்லா முக்கியஸ்தர்களும் வந்து கலந்து கொண்டார்களா?

    நீங்கள் செய்வது எல்லாம் ஒகே.

    ஊர் ஒற்றுமைக்கு என்ன செய்தீர்கள்?

    அல்லது

    என்ன செய்யப்போகின்றீர்கள்?

    அல்லது

    என்ன முடிவு எடுத்தீர்கள்?

    ஒவ்வொரு மனிதனும், சக மனிதனாக நினைக்காதவரை யாரும் உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
    த/பெ. மர்ஹூம். கோ. மு. முஹம்மது அலியார்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.