.

Pages

Sunday, May 24, 2015

ரஹ்மானியா அரபிக் கல்லூரியின் 100 ம் ஆண்டு நிறைவு விழா - பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி: நேரடி ரிப்போர்ட் !

அதிரையில் நேற்றும் ( 23-05-2015 ) இன்றும் ( 24-05-2015 )  இரண்டு நாட்கள் ரஹ்மானியா மதரஸா 100 ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு எல்எம் எஸ் முஹம்மது அப்துல் காதர் ஆலிம் தலைமை வகித்தார். எம் ஏ அப்துல் லத்திப் ஆலிம், எஸ் ஏ முஹம்மது இப்ராகிம், ஜேஎம் இக்பால் ஹாஜியார் மற்றும் ரஹ்மானியா அரபிக்கல்லூரி நிர்வாகிகள், ஆலிம்கள் முன்னிலை வகித்தனர்.

இதையடுத்து  இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதியிலிருந்து வருகை தந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பலர் பல்வேறு தலைப்பின் கீழ் சிறப்புரையாற்றினார்கள். இவர்களின் சிறப்புரை அதிரையின் பிரதான பகுதிகளுக்கு ஒலிபெருக்கி மூலம் எடுத்துச்செல்லப்பட்டன.

முன்னதாக  ரஹ்மானியா அரபிக்கல்லூரி பேராசிரியர் எம். முஹம்மது அலி ஆலிம் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் ரஹ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் K.T முஹம்மது குட்டி ஆலிம் மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேருரை நிகழ்த்தினார். இதையடுத்து ரஹ்மானியா அரபிக்கல்லூரி குறித்து சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. விழா மலரை ரூபாய் 100 செலுத்தி ஆர்வத்துடன் பெற்றுச்சென்றனர்.

விழா முடிவில் கல்லூரி மாணவர்கள் நன்றி கூறினார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் திக்ரு மற்றும் சிறப்பு துஆ வுடன் நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் வெளியூர் ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 4000 த்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

பிற மாநிலம் மற்றும் வெளியூர் பகுதியிலிருந்து வருகை தந்த அனைவருக்கும் அதிரை ஜாவியா, தக்வா பள்ளி, முஹைதீன் ஜும்மா பள்ளி, பெரிய ஜும்மா உள்ளிட்ட பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களுக்கு உணவு வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. வெளியூர் சகோதரர்கள் விழா நடைபெறும் இடத்தை அறிந்து கொள்ளும் வகையில் ஆங்காங்கே அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. இவர்களுக்கு உதவுவதற்காக ஆங்காங்கே தன்னார்வல இளைஞர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். மருத்துவ முதலுதவிக்கு மருத்துவர் ஹனீஃப் மற்றும் செல்வராஜ் ஆகியோர் நியமிக்கபட்டிருந்தனர். இவர்கள் தேவையான மருந்துகளுடன் தயார் நிலையில் இருந்தனர். மேலும் அவசர மருத்தவ சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

விழா ஏற்பாடுகளை காதிர் முகைதீன் கல்லூரியின் முன்னாள் தாளாளர் முனைவர் அஸ்லம் தலைமையில் விழா குழுவினர் சிறப்பாக செய்து இருந்தனர். ஒவ்வொரு தன்னார்வலர்களும் தலா ஒரு பொறுப்புகளை ஆர்வத்துடன் எடுத்து செய்தனர். அதிரையை சேர்ந்த தன்னார்வல இளைஞர்கள் பலர் ஒரே யூனிபார்ம் அணிந்து பணியாற்றியது பார்ப்போர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஏராளமான வாகனங்கள் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.
 
 
 
 
 
 


12 comments:

  1. எளிமை, அடக்கம் , வாய்மை, பண்புகளை கொண்ட ஆலிம்களை உருவாக்கி இன்று நூற்றாண்டை கடந்து பயணித்துக் கொண்டிருக்கும் அரபிக் கல்லூரி புகழும் சிறப்புகளும் தன்னெகத்தெ கொண்டவை. ஊரின் பெயரைச் சொன்னால் அரபிக் கல்லூரியும் கலைக் கல்லூரியும் தான் மக்களுக்கு நினைவுக்கு வரும் என்பதை நாம் பெருமிதம் கொள்ளலாம்.

    அக்கப்போர் அரசியல்வாதிக்கு காட்டும் ஆடம்பரம் இல்லாமலும் விழா சீரும் சிறப்பாக நடைப்பெற ஒத்துழைப்பு நல்கிய அனைபெருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆலிம்களே! உங்கள் கடமை பட்டங்களோடு இல்லாமல் பட்டி தொட்டிக்கெல்லாம் எடுத்துச் செல்லுங்கள், அல்லாஹ், யாவருக்கும் துனைநிர்ப்பவன்!

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. மதரஸத்துல் ரஹ்மானிய 100 ஆம் ஆண்டு பட்டம் அளிப்பிற்கு அதிரைக்கு வருகை தந்த உள்ளூர் மற்றும் வெளியூர் மக்களுக்கும், இவ்விழாவிற்கு உறுதுணையாக‌ இருந்து ரஹ்மானிய நிர்வாக கமிட்டியினருக்கும்,அனைத்து தெரு மற்றும் முஹல்லா வாசிகளுக்கும்,அதிரை பொது மற்றும் தன்னார்வ தொண்டர்களுக்கும் மேலும் ரஹ்மானிய மாணவர்கள்,உஸ்தாத் மார்களுக்கும்,அனைத்து வழிவகையிலும் உதவிகள் செய்த அனைத்து நல்ல உள்ளங்களும் இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக, ஆமீன்.

    ReplyDelete

  4. அக்கப்போர் அரசியல்வாதிக்கு காட்டும் ஆடம்பரம் இல்லாமலும் விழா சீரும் சிறப்பாக நடைப்பெற ஒத்துழைப்பு நல்கிய அனைபெருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆலிம்களே! உங்கள் கடமை பட்டங்களோடு இல்லாமல் பட்டி தொட்டிக்கெல்லாம் எடுத்துச் செல்லுங்கள், அல்லாஹ், யாவருக்கும் துனைநிர்ப்பவன்!

    ReplyDelete
  5. அக்கப்போர் அரசியல்வாதிக்கு காட்டும் ஆடம்பரம் இல்லாமலும் விழா சீரும் சிறப்பாக நடைப்பெற ஒத்துழைப்பு நல்கிய அனைபெருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆலிம்களே! உங்கள் கடமை பட்டங்களோடு இல்லாமல் பட்டி தொட்டிக்கெல்லாம் எடுத்துச் செல்லுங்கள், அல்லாஹ், யாவருக்கும் துனைநிர்ப்பவன்!

    ReplyDelete
  6. அளவிலா அன்பாளன் அல்லாஹ்வின் ரஹ்மத்
    உளமதில் ஆகியே ஓங்கும் - இளமை
    மனதில் இறைவன் மதியை விதைப்பார்
    தனவந் தர்கல்வித் தந்து.

    ReplyDelete
  7. ஊர் சேர்மனைத் தவிர அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ReplyDelete
  8. நமதூரின் பழமையை பறைசாற்றும் விதத்தில் ரஹ்மானியா மதரஸாவும் ஒன்றாக இருப்பது நாம் பெருமைப் படக் கூடியவையாக இருக்கிறது. ரஹ்மானியா மதரஸாவின் 100ம் ஆண்டுவிழா மற்றும் பட்டமளிப்பு விழா சிறப்புடன் நடக்க பாடுபட்ட அனைவருக்கும் உளம் நிறைவான வாழ்த்துக்களை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

    ReplyDelete
  9. தூர தொலைவில் இருக்கும் எங்களுக்கு நேரில் பார்த்தது போல செய்தி தந்த அதிரை நியூஸ் குழுவிற்கு நன்றி

    ReplyDelete
  10. நூற்றாண்டு கண்ட நமதூர் அல்மதரஸத்துர் ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரியில் பட்டம் வாங்கிய ஆலிம்சாக்கள் மாநில, மாவட்ட அளவில் கூட பேச்சாளராகவோ எழுத்தாளராகவோ பிரபலம் அடையவில்லையே ஏன்? அதிரையில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு வெளியூரிலிருந்து பாகவி,மன்பஈ,காஸிமி போன்ற ஆலிம்களை அழைத்து வரவேண்டியுள்ளது. பேச்சாற்றல் உள்ள ரஹ்மானி அதிரமீ இல்லையே! இந்த மதரஸாவினால் ஊருக்கு என்ன பயன்?

    அங்கு போதிக்கப்படும் கல்வியின் தரம், திறமையற்ற முதல்வர், ஆசிரியர்கள்தானே காரணம்.
    எஞ்ஜினீரிங் மற்றும் பட்டப்படிப்பு படிக்க அதிகம் நாடும் மாணவர்கள் மத்தியில் ஒரு சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆலிம் ஆக்க விரும்பி,வெளியூர் வெளி மாநிலங்களுக்கு அனுப்புகிறார்கள் ஏன் என்று சிந்தித்தோமா? ரஹ்மானியாவில் பட்டம் வாங்கினால் மார்க்க அறிவு இல்லாமல்,மெளலிது ஓதுவதற்கும் தொழுகை நடத்துவதற்கும் மட்டும் தான் முடிகிறது என்பதால்தானே.பாக்கர் ஆலிம்சா,அபூபக்கர் ஆலிம்சா, முஹம்மது அலி ஆலிம்சாவுக்கு பிறகு,முஹம்மது குட்டி போன்ற திறமையற்ற பரேலி கொள்கை கொண்டவரால் மத்ராஸாவின் சொத்துக்கள் வீணாகிறது.கேரளாவுக்கு போய்கொண்டிருக்கிறது.
    அதிரையில் நிலவும் எந்த பிரச்சினைக்கும் இம் மதரஸா முதல்வர் தீர்வு சொன்னதில்லை. இம் மதரஸாவில் ஆசிரியராக பணியிலிருந்து அலி ஆலிம்சா,அப்துல் லத்தீப் ஆலிம்சா போன்ற உள்ளூர் ஆலிம்சாக்களை விரட்டி விட்டு, சில செல்வந்தர்களுக்கு ஜால்ரா போட்டு அவர்களும் இவர் ஏதோ செய்து விடுவார் என்று பயந்து அவருக்குக கட்டுப்பட்டு இருக்கிறார்கள்.எல்லாம் வல்ல அல்லாஹ் இம் மதரஸாவை காப்பற்றி நன்னோகத்தில் தன் சொத்துகளை வக்பு செய்தவர்களுக்கு மறுமையில் நற்கூலி கொடுப்பானாக!

    ReplyDelete
  11. அழகான பெயர் கொண்ட அப்துல்லா அவர்களே , சூரியனைப் பார்த்து நாய் குரைத்து என்ன பயன்?

    ReplyDelete
  12. /////அழகான பெயர் கொண்ட அப்துல்லா அவர்களே , சூரியனைப் பார்த்து நாய் குரைத்து என்ன பயன்?/////

    ////ஊர் சேர்மனைத் தவிர அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது/////

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.