அதிரை ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் [ AFCC ] நடத்தும் 10 ம் ஆண்டு மாவட்ட அளவிலான மாபெரும் டி20 கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த [ 18-04-2015 ] அன்று ஷிஃபா மருத்துவமனை எதிர்புறம் அமைந்துள்ள கிராணி விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த போட்டிகளில் பல்வேறு அணிகள் விளையாடி வந்தனர். இந்நிலையில் தொடர்போட்டியின் இறுதி ஆட்டம் இன்று மாலை துவங்கியது. இன்றைய இறுதி ஆட்டத்தில் தஞ்சை போலீஸ் அணி, தஞ்சை ஸ்ரீ கணேஷ் ஆகிய இரு அணிகளும் விளையாடி வருகிறது.
முன்னதாக டாஸ் வென்ற தஞ்சை ஸ்ரீ கணேஷ் அணியினர் பேட்டிங் செய்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் பகுதி ஆட்டத்தில் தஞ்சை ஸ்ரீ கணேஷ் அணியினர் 159 / 10 எடுத்து, 160 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இன்றைய இறுதி ஆட்ட நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட AFFA நிர்வாகிகள் செய்யது முஹம்மது புஹாரி ( ஆதம் டெக்டைல்ஸ் ), அஹமது ஹாஜா, சாகுல் ஹமீது, சேக் தம்பி, சமீயுல்லா, அஹமது அனஸ், 'அதிரை நியூஸ்' நிர்வாகி கே. இத்ரீஸ் அஹமது, கிரிக்கெட் பயிற்சியாளர் பாப்பாநாடு ராஜா ஆகியரோடு AFCC நிர்வாகிகள் விளையாட்டு வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து துவக்கி வைத்தனர்.
இன்றைய ஆட்ட நடுவர்களாக சலீம், இஸ்மாயில் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர். நிகழ்சிகள் அனைத்தையும் தாஜுதீன் தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை AFCC நிர்வாகிகள் கமாலுதீன், ஹுசைன், தீனுல் ஹக், இல்முதீன், தாஜுதீன், ஹாசிம், இஸ்மாயில்,சலீம், தமீம் மற்றும் AFCC ஏனைய நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
இன்றைய இறுதி ஆட்டத்தை காண ஏராளமான விளையாட்டு ஆர்வலர்கள், இளைஞர்கள் மைதானத்திற்கு வந்துள்ளனர்.
போட்டி முடிவில் வெற்றி பெற்ற அணியினருக்கும், தொடர் போட்டியில் சாதனை நிகழ்த்திய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட இருக்கிறது.
களத்திலிருந்து அதிரை சாலிஹ்
கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த போட்டிகளில் பல்வேறு அணிகள் விளையாடி வந்தனர். இந்நிலையில் தொடர்போட்டியின் இறுதி ஆட்டம் இன்று மாலை துவங்கியது. இன்றைய இறுதி ஆட்டத்தில் தஞ்சை போலீஸ் அணி, தஞ்சை ஸ்ரீ கணேஷ் ஆகிய இரு அணிகளும் விளையாடி வருகிறது.
முன்னதாக டாஸ் வென்ற தஞ்சை ஸ்ரீ கணேஷ் அணியினர் பேட்டிங் செய்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் பகுதி ஆட்டத்தில் தஞ்சை ஸ்ரீ கணேஷ் அணியினர் 159 / 10 எடுத்து, 160 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இன்றைய இறுதி ஆட்ட நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட AFFA நிர்வாகிகள் செய்யது முஹம்மது புஹாரி ( ஆதம் டெக்டைல்ஸ் ), அஹமது ஹாஜா, சாகுல் ஹமீது, சேக் தம்பி, சமீயுல்லா, அஹமது அனஸ், 'அதிரை நியூஸ்' நிர்வாகி கே. இத்ரீஸ் அஹமது, கிரிக்கெட் பயிற்சியாளர் பாப்பாநாடு ராஜா ஆகியரோடு AFCC நிர்வாகிகள் விளையாட்டு வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து துவக்கி வைத்தனர்.
இன்றைய ஆட்ட நடுவர்களாக சலீம், இஸ்மாயில் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர். நிகழ்சிகள் அனைத்தையும் தாஜுதீன் தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை AFCC நிர்வாகிகள் கமாலுதீன், ஹுசைன், தீனுல் ஹக், இல்முதீன், தாஜுதீன், ஹாசிம், இஸ்மாயில்,சலீம், தமீம் மற்றும் AFCC ஏனைய நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
இன்றைய இறுதி ஆட்டத்தை காண ஏராளமான விளையாட்டு ஆர்வலர்கள், இளைஞர்கள் மைதானத்திற்கு வந்துள்ளனர்.
போட்டி முடிவில் வெற்றி பெற்ற அணியினருக்கும், தொடர் போட்டியில் சாதனை நிகழ்த்திய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட இருக்கிறது.
களத்திலிருந்து அதிரை சாலிஹ்







No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.