.

Pages

Monday, May 11, 2015

அதிரையில் அதிமுகவினர் உற்சாக கொண்டாட்டம் !

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு அப்பீல் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்து தீர்ப்பு அளித்தது. இதையடுத்து அதிரை பேருந்து நிலையத்தில் திரண்ட அதிமுகவினர் வெடி வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, பேண்ட் வாத்தியம் முழங்க உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதில் அதிமுக மாவட்ட, ஒன்றிய, நகர கிளை நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.
 
 
 
 

3 comments:

  1. இது எதிர்பர்த்த ஒன்றுதான்,அருண் ஜெட்லி வந்து சந்தித்தபோதே முடிவாகி விட்டது. சட்டம் என்பது சாதாரண மனிதர்க்கு மட்டும்தான், அரசியல்வாதிகளுக்கு இல்லை. கடந்த ஓரிரு வாரங்களில் சல்மான் கான் வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, மற்றும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்து நீதித்துறை மீது மக்களின் நம்பிக்கை குறைவதாகவே உள்ளது. இது சாமான்ய மக்களுக்கு கிடைக்குமா? உதாரணத்திற்காக ஆந்திராவில் 20 தமிழர்கள் போலி எண்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு போன்றவற்றில் அடிப்படை நியாயங்களுக்காக விசாரணை கமிடின் வைக்கக் கோரி பலர் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் கேட்கக் கூட நாதியில்லாமல் உள்ளது. 2000 பேரை கொன்ற மோடியே தண்டிக்கப் படவில்லை போங்கையா நீங்களும் உங்க சட்டமும்!

    ReplyDelete
  2. ADMK also two parts in Adirai. one is pitchai party another one is Azees party like DMK

    ReplyDelete
  3. இந்திய சட்டம் மக்களை பாதுகாக்கின்றனவோ இல்லையோ ஆனால் அரசியல்வாதிகளை நன்றாக பாதுகாக்கின்றது, ஒரேஇடம் ஒரே கோர்ட் முரன்பாடு ஏன்?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.