.

Pages

Tuesday, May 26, 2015

முஹம்மது ஆஷிப்க்கு சிறந்த விளையாட்டு வீரர் விருது !

அதிரை சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்களை இனங்கண்டு அவர்களின் பணிகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் 'அதிரை நியூஸ் கல்வி விருது - சாதனையாளர்கள் விருது 2015' என்ற பெயரில் விருது வழங்கும் விழா நேற்று மாலை அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

கால்பந்தாட்டம் – ஓட்டப்பந்தயம் போட்டிகளில் மாவட்டம் மற்றும் வட்டார அளவில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு சாம்பியன் பட்டங்களை தொடர்ந்து பெற்று வருவது. தனது 14 வயதில் தமிழக அளவில் ஹோசூரில் நடைபெற்ற கால்பந்தாட்ட  போட்டியில் விளையாட தேர்வானது. மாவட்டம் மற்றும் மண்டல அளவில் நடைபெற்ற 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்ட பந்தய போட்டிகளில் கலந்து கொண்டு சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. உள்ளூர் கால்பந்தாட்ட AFFA அணியில் கலந்துகொண்டு ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியது உள்ளிட்ட சாதனைகளுக்காக விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரி புல முதல்வர் முனைவர் இளங்கோவன் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

மேலும் சென்னை விக்டரி ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் இக்பால் சார்பில் சுழற்கோப்பை பரிசளிக்கப்பட்டது. சிறந்த விளையாட்டு வீரர் விருது பெற்ற எம்.எஸ் முஹம்மது ஆஷிப்பை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

1 comment:

  1. வாழ்த்துக்கள்..! பாராட்டுக்கள்..!
    அதிரை (AFFA) அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் ,இளம் நட்சத்திர வீரர் ஆசிபின் சாதனைகள் தொடர வாழ்துகிறேன்..

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.