.

Pages

Thursday, May 21, 2015

மாநில அளவில் சாதனை நிகழ்த்திய மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு !

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த மாதம் மார்ச் மாதம் 10ம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்றது. இன்று  மாணவ மாணவியர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் தஞ்சாவூர் மாவட்ட 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை வெளியிட்டு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் 37 ஆயிரத்து 374 மாணவ மாணவியர்கள் தேர்ச்சி எழுதினார்கள். 35 ஆயிரத்து 200 மாணவ மாணவியர்கள் பொதுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.  தேர்ச்சி சதவிகிதம் 94.18 ஆகும். சென்ற ஆண்டு (2014) தேர்ச்சி விகிதம் 92.59 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 18491 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 16947 மாணவர்கள் தேர்ச்சி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  தேர்ச்சி சதவிகிதம் 91.65 ஆகும்.

18883 மாணவியர்கள் தேர்வு  எழுதியதில் 18253 மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  தேர்ச்சி சதவிகிதம் 94.18 ஆகும்.  மாநில அளவில் தஞ்சாவ10ர் மாவட்டம் 15வது தரப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாநில அளவில் 500க்கு 499 மதிப்பெண் பெற்ற 4 மாணவ மாணவியர்கள் முதலிடமும்,  மாநில அளவில் 500க்கு 498 மதிப்பெண் பெற்ற 14 மாணவ மாணவியர்கள் இரண்டாமிடமும், மாநில அளவில் 500க்கு 497 மதிப்பெண் பெற்ற 27 மாணவ மாணவியர்கள் மூன்றாடமிடம் பெற்றுள்ளார்.

மேலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் 60 அரசுப் பள்ளிகளும், 21 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 7 சுய நிதி பள்ளிகளும், 62 மெட்ரிக் பள்ளிகளும் மொத்தம் 150 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதற்காக பாடுப்பட்ட கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரிய ஆசிரியைகள் மற்றும்; உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும்  என்னுடைய வாழத்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து மேல்நிலை தேர்விலும், அதிக மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். உங்களுடன் படித்து குறைந்த மதிப்பெண்கள் பெற்றுள்ள மாணவ மாணவியர்களுக்கு தகுந்த உதவிகளை பகிர்ந்து அவர்களும் அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்கு உதவிகரமாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு கல்வித் தொடர்பான எந்தவிதமான உதவிகளாக இருந்தாலும் செய்து தருவதற்கு மாவட்ட நிர்வாக தயாராக உள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் வே.தமிழரசு, பட்டுக்கோட்டை கல்வி  மாவட்ட அலுவலர் திரு.ராஜசேகரன், தஞ்சாவூர் கல்வி மாவட்ட அலுவலர்  திரு.ரெங்கநாதன்,  கும்பகோணம் கல்வி மாவட்ட அலுவலர் திரு.அண்ணா பிள்ளை, மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் திரு.செங்குட்டுவன்,  நேர்முக உதவியாளர் திரு.நெடுஞ்செழியன், ஆகியோர் உடனிருந்தனர்.
 
அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் மொத்தம் 188 மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் புதுமனைத்தெருவை சேர்ந்த முஹம்மது தவ்பீக் மகள் M.T. பர்வின் சுல்தானா  497 / 500 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை நிகழ்த்தினார். மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்து பரிசுகளை வழங்கினார்.

2 comments:

  1. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மீண்டும் சாதனை புரிய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மீண்டும் சாதனை புரிய வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.