.

Pages

Monday, May 25, 2015

இன்னும் சிறிது நேரத்தில் அதிரை நியூஸ் கல்வி விருது நிகழ்ச்சி தொடக்கம்!

அதிரை நியூஸ் கல்வி விருது மற்றும் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா இன்று திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் நமதூர் பகுதி பள்ளிகளில் நடப்பாண்டில் SSLC, +2 அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, முதல் நான்கு இடங்களை பெற்றுள்ள மாணவ மாணவிகள், கல்விச்சேவையில் சிறந்து விளங்கும் ஆசிரியை ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், பல்வேறு துறைகளில் சாதனைபடைத்தவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் விருது வழங்கி கெளரவிக்கப்பட உள்ளது.

மேலும் அதிரையை சேர்ந்த கல்வியாளர்கள் பலர் நமதூர் பகுதியின் ஏழை மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி பயில்வதற்கு கல்வி உதவித்தொகை வழங்கவும், நமதூர் ஒவ்வொரு பள்ளிகளில் நடப்பாண்டில் SSLC, +2 அரசு பொதுத்தேர்வுகளில் தனிப் பாடப்பிரிவுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கவும் முன்வந்துள்ளனர்.

விழா அரங்கில் பார்வையாளர்களும், விருதுக்குரியவர்களும் வந்தவண்ணம் உள்ளனர். இன்ஷா அல்லாஹ் இன்னும் சிறிது நேரத்தில் விழா தொடங்கிவிடும்.

ஆகவே அனைவரும் இவ்விழாவில் கலந்துகொள்ளுமாறு அதிரை நியூஸ் சார்பில் அழைக்கப்படுகிறார்கள்.

2 comments:

  1. அதிரை நியூஸ் நமதூர் மட்டுமின்றி நாடு தழுவிய மற்றும் தமிழ் சமூகம் உலகில் எங்கெல்லாம் வாழ்கின்றனவோ அங்கெல்லாம் உலகளாவிய சமூக விழிப்புணர்வுகள் மற்றும் கல்வி போன்றவற்றில் இந்த ஊடகம் ஆற்றிவரும் சமூக பணிகள் அடியேனுக்கு தெரியும்.கனடா ,ஜப்பான் ,UK, இலைங்கை தமிழ்மக்களுக்கு இந்த ஊடகத்தை அறிமுகம் செய்துவைத்தவன் அடியேனே .இன்று வரை தமிழ் மக்களிடம் பாராட்டை பெற்றுவரும் இந்த அதிரை நியுஸ் ஊடகம் மேலும் பல சாதனைகள் செய்ய வாழ்த்துக்கள் ...

    நமதூர் வலைதள ஊடகங்களில் கருத்துக்கள் பதிவது சற்றே குறைந்துள்ளது இதற்கு காரணம் அனைவர்களின் கையிலும் Mobile போன்கள் இது போன்ற சூழல் காலத்தின் கட்டாயம் ஆகவே அதிரை வலைதளங்கள் தங்களின் பதிவிற்கு வாசகர்களின் கருத்துக்கள் இல்லாததால் உங்களின் ஊடகத்தை யாரும் நேசிக்க வில்லை என்று கருத்தில் கொள்ளவேண்டாம் .

    வெளிநாடு வாழ் என்போன்ற எத்துணையோ உள்ளங்கள் முதலில் பார்ப்பது நமதூர் வலைதள செய்திகளையே .

    நேரமின்னை மற்றும் வளர்ந்த நாடுகளில் பனி புரியும் போது மனிதர்களின் இயந்திர வாழ்க்கை இதுவே பதிவுகளுக்கு அநேகம் வாசகர்கள் கருத்து இடுவதில் சிரமம் .

    ReplyDelete
  2. அதிரை நியுஸ் ஊடகம் மேலும் பல சாதனைகள் செய்ய வாழ்த்துக்கள் ...

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.