.

Pages

Tuesday, May 26, 2015

அதிரை நியூஸ் கல்வி விருது விழாவில் மாணவ மாணவிக்கு கல்வி உதவித்தொகை !

நமதூர் பகுதியின் பள்ளிகளில் கல்வி பயிலும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி பயில்வதற்காக கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இதில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் மற்றும் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆகிய இருவருக்கும் தலா ₹ 5,000/-வீதம் மொத்தம் ₹ 10,000/-த்தை கண்டசாலா முஹம்மது ஷெரீப் குடும்பத்தினர் சார்பில் வழங்கப்பட்டது. மேலும் அதிரை நியூஸ் சார்பில் மு.செ.மு சபீர் அஹமது ( திருப்பூர் ) அவர்களால் அதிரை எத்தீம்கான மதரஸா மாணவர் ஒருவருக்கு ₹ 3,000/- வழங்கப்பட்டது. இவற்றை அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரி புல முதல்வர் முனைவர் இளங்கோவன் உரியவரிடம் ஒப்படைத்தார்.

2 comments:

  1. உதவித் தொகைகள் அல்ல !
    அவர்கள் வாழ்வில்
    உச்சங்கள் எட்ட
    உதவிடும் தொகுப்பான
    உற்சாகத் தூண்டுதல்.

    ReplyDelete
  2. நன்கு படிக்கும் ஏழைமாணவர்களுக்கு ஊக்கத்தொகை அளித்து உதவிய தாராள மனம் படைத்தவர்களுக்கு எனது மனமார்ந்த. வாழ்த்துக்கள். இன்னும் முடிந்தவரை உதவி நல்ல திறமையான மாணவர்கள் நமதுரிலும் நிறைய. உருவாக்கிடுங்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.