.

Pages

Sunday, May 17, 2015

செக்கடி குளம்: சிறப்பு ஆவணப்படம் [ காணொளி இணைப்பு ]

செக்கடி குளத்தை நவீன படுத்தும் முயற்சியில் அப்பகுதியை சேர்ந்த தங்களை பகிரங்கமாக முன்னிலை படுத்த விரும்பாத சமூக ஆர்வலர்கள் கடந்த சில மாதங்களாக தீவிரமாக ஈடுபட்டு செக்கடி குளம் புனரமைப்பு பணிகளை சிறப்பாக செய்து முடித்தனர். உடல் ஆரோக்கியம், மன புத்துணர்வு, சமூக பாதுகாப்பு, சுகாதாரம்  உள்ளிட்ட முக்கிய அம்சங்களை வலியுறுத்தி அமைக்கப்பட்டுள்ள செக்கடி குளம் நடை பாதை பயிற்சி வளாகத்த்தின் பணிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலகட்டத்தில் நடைபெற்று வந்தது.

இதன் சிறப்பு அம்சமாக தமிழக அரசின் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தும் வகையில் குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சேரும் மழைநீரை பைப் மூலம் குளத்திற்கு போய் சேரும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  செக்கடி மேடு நடை பயிற்சி பாதையில் சிறுவர்கள் ஒன்றாக விளையாடும் நோக்கில் ஆங்காங்கே பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் சறுக்கை, ஊஞ்சல் உள்ளிட்ட முக்கிய விளையாட்டு உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளது. குளத்தை சுற்றி பசுமையை ஏற்படுத்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் பெங்களூரிலிருந்து வரவழைக்கப்பட்டு ஆங்காங்கே நடப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நிகழ்ச்சி கடந்த [ 02-05-2015 ] அன்று நடைபெற்றது. இதில் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.எச் அஸ்லம் தலைமை வகித்தார். ஹாஜி A.M இக்பால், ஹாஜி M.S. உமர், சம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் ஹாஜி S. முஹம்மது ஹசன், அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு தலைவர் ஹாஜி M.M.S சேக் நசுருதீன், காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் முன்னாள் செயலாளர் ஹாஜி S.M.S அஸ்லம், அதிரை பேரூராட்சி துணை தலைவர் என் பிச்சை, அதிரை அப்துல் அஜீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தனது 70 வயதிலும் தினமும் நடைபயிற்சியை ஆர்வத்துடன் மேற்கொண்டு வரும் நமதூர் சமூக ஆர்வலர் A.M.K அகமது அவர்கள் நடை பயிற்சி பாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதைதொடர்ந்து நமதூரின் பிரபல மருத்துவர் H அப்துல் ஹக்கீம் வாழ்த்துரை வழங்கினார்.

நமதூரின் பிரபல தொழில் அதிபரும், சமூக ஆர்வலருமாகிய ஹாஜி ஜனாப் M.S தாஜுதீன் அவர்கள்  நடைமேடை பராமரிப்பு பொறுப்பை நமதூர் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.

முன்னதாக காதிர் முகைதீன் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர் அவர்கள் வரவேற்புரை ஆற்றி, நிகழ்ச்சிகள் அனைத்தையும் இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார். சிறுவன் அஹமது முகைதீன் கிராத் ஓதினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

திறப்பு விழா காணப்பட்டதை தொடர்ந்து பெண்கள், சிறுவர்கள் உட்பட தினமும் ஏராளமான பொதுமக்கள் நடைபயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களின் மிகுந்த வரவேற்பை பெற்றுவரும் செக்கடி குளம் நடை பாதை பயிற்சி குறித்து ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது போன்ற நடைபயிற்சி பாதை ஒவ்வொரு ஊர்களிலும் உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் இவற்றை நமதூர் சமூக ஆர்வலர்கள் தயாரித்து வெளியிட்டுள்ளனர்.

இதோ அதிரை நியூஸ் வாசகர்களுக்கு செக்கடி குளம் சிறப்பு ஆவணப்படத்தை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம்.

1 comment:

  1. இது ஒரு தனிப்பட்ட முன .மீயன்னா .குடும்பமான மர்கூம் M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் புதல்வர்கள் ஹாஜி . M S தாஜுதீன் , M S சஹாபுதீன் , M S சைபுதீன் மற்றும் M S நிஜாமுத்தீன் இவர்களுக்கு சொந்தமான தீன் குழுமம் மட்டுமே இதற்கான முழு பொருளுதவியை சுமார் ஒரு கோடி ரூபாய்க்களை இதற்காக செலவு செய்துள்ளனர் என்பதை இந்த Documentary இல் விளம்பர படுத்தாதது அந்த குடும்பத்தாரின் பெருந்தன்மையையும் அவர்களின் தர்ம சிந்தனையையும் அறிந்தவர்கள் மட்டுமே அறிய முடியும் .

    தர்மங்கள் விளம்பரபடுத்த படுவது காலத்தின் கட்டாயம் காரணம் அதுவே மற்ற செல்வந்தர்களையும் இதே போல் தர்மசிந்தனைகளை செய்யத்தூண்டும் .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.