.

Pages

Tuesday, May 26, 2015

நிருபர் எஸ்.செல்வகுமாருக்கு சிறந்த பத்திரிகையாளர் விருது !

அதிரை சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்களை இனங்கண்டு அவர்களின் பணிகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் 'அதிரை நியூஸ் கல்வி விருது - சாதனையாளர்கள் விருது 2015' என்ற பெயரில் விருது வழங்கும் விழா நேற்று மாலை அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

அதிரை சுற்றுவட்டார பகுதியில் அன்றாட நிகழ்வுகளை நாளிதழுக்கு தினமும் வழங்கி வருவது. உள்ளூர் செய்திகளை அதிகளவில் நாளிதழில் இடம்பெற செய்து வரும் பணிக்காக நிருபர் எஸ். செல்வகுமாருக்கு இந்த விருது வழங்கப்பபட்டது. இந்த விருதை திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் முனைவர் பி.எம் மன்சூர் அவர்கள் வழங்கி கெளரவித்தார்.

சிறந்த பத்திரிகையாளர் விருது பெற்ற எஸ். செல்வகுமாரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் வாழ்த்தினர்.

1 comment:

  1. உள்ளூர் செய்திகளை தருவது அதிரை நியூஸ் தான் இருந்தாலும் மற்ற பத்திரிக்கைகளை வாழ்த்துவது பெருமிதம். சிறந்த பத்திரிகையாளர் விருது பெற்ற நண்பர் எஸ். செல்வகுமாரை வாழ்த்துகிறோம்!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.