இந்நிகழ்ச்சியில் நமதூர் பகுதி பள்ளிகளில் நடப்பாண்டில் SSLC, +2 அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, முதல் நான்கு இடங்களை பெற்றுள்ள மாணவ மாணவிகள், கல்விச்சேவையில் சிறந்து விளங்கும் ஆசிரியை ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், பல்வேறு துறைகளில் சாதனைபடைத்தவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் விருது வழங்கி கெளரவிக்கப்பட உள்ளது.
மேலும் அதிரையை சேர்ந்த கல்வியாளர்கள் பலர் நமதூர் பகுதியின் ஏழை மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி பயில்வதற்கு கல்வி உதவித்தொகை வழங்கவும், நமதூர் ஒவ்வொரு பள்ளிகளில் நடப்பாண்டில் SSLC, +2 அரசு பொதுத்தேர்வுகளில் தனிப் பாடப்பிரிவுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கவும் முன்வந்துள்ளனர்.
இந்நிலையில் இதற்கான பணிகள் அதிரை நியூஸ் விழா குழுவினர் சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிரையின் செயல்படும் ஒரு சில வர்த்தக நிறுவனங்கள் இந்த விழாவை பொதுமக்கள் மத்தியில் எடுத்துச்செல்ல முன்வந்தனர். இதற்காக ஃப்ளக்ஸ் பேனர்கள், துண்டு பிரசுரங்கள், வால் போஸ்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. அனைவரையும் நேரடியாகவும், தொலைபேசி வாயிலாகவும், மின்னஞ்சல், வாட்ஸ்அப், டெலிகிராம் மூலமாக அழைப்பு வைக்கப்பட்டு வருகிறது.
கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இந்த விழாவில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அதிரை நியூஸ் குழு
உங்களின் இந்த முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்களின் இந்த முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்
ReplyDeleteமாஷா அல்லாஹ் .... அருமையான பணிகள் ... தொடரட்டும் உங்கள் சேவைகள் ....
ReplyDeleteவருடா வருடம் இதுபோல் சிறப்பாய் நடத்திட வாழ்த்துக்கள்
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇந்த நிகழுவு மூலம் ஒரு உத்வேகம் பிறக்கட்டும், வென்றவர்கள் மிகிழட்டும், வெற்றியை இழந்தவர்கள் மறுவருடம் வெற்றிபெற முயலட்டும்.
வருடா வருடம் இன்னும் மேலாக மலர்ந்து மலரட்டும்.
எல்லாவற்றிர்க்கும் மேலாக, நம் அனைவரையுய்ம் படைத்த வல்ல நாயனை நினைக்க மறக்க வேண்டாம்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
சிறப்பான தருணம் ..
ReplyDeleteஇந்த விருது தமிழகத்திலேயே தலை சிறந்த விருதாக வளம் வளம் வர எனது வாழ்த்துக்கள்
அதிரை நியூஸின் இந்த முயற்சி வெற்றி பெற அல்லாஹ் உதவி செய்வானாக!
ReplyDeleteஇது போன்று நமதூர் விளையாட்டு வீரர்களுக்கும்,விருது வழங்கினால் இன்னும் அருமையாக இருக்கும்.
அதிரை நியூஸின் இந்த முயற்சி வெற்றி பெற அல்லாஹ் உதவி செய்வானாக!
ReplyDeleteஇது போன்று நமதூர் விளையாட்டு வீரர்களுக்கும்,விருது வழங்கினால் இன்னும் அருமையாக இருக்கும்.
Cingratulation
ReplyDelete
ReplyDeleteவருடா வருடம் இதுபோல் சிறப்பாய் நடத்திட வாழ்த்துக்கள்
மாணவர்களை இப்படி தட்டிக் கொடுத்து ஊக்குவிப்பதன் மூலம் அடுத்தடுத்து வரும் மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வமும் அக்கறையும் உண்டாகும்.ஒருவிதத்தில் இத்தகைய நிகழ்ச்சிகள் மாணாக்களுக்கு புது வலிமையை ஏற்படுத்துவது போலாகும்.
ReplyDeleteஇந்நிகழ்ச்சிக்கு பொதுமக்களும் அனைத்து மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாய் கேட்டுக் கொள்கிறேன். இனிவரும்காலங்களில் இத்தகைய நிகழ்ச்சி அனைவர்களின் ஒத்துழைப்புடன் தொடர்ந்து நடத்திட முயற்ச்சிப்போம். இன்ஷா அல்லாஹ் .