.

Pages

Tuesday, May 26, 2015

கவிஞர் சபீர் அஹ்மது அபு ஷாஹ்ருக் அவர்களுக்கு சிறந்த கவிஞர் விருது !

அதிரை சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்களை இனங்கண்டு அவர்களின் பணிகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் 'அதிரை நியூஸ் கல்வி விருது - சாதனையாளர்கள் விருது 2015' என்ற பெயரில் விருது வழங்கும் விழா நேற்று மாலை அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

சபீர் அபு ஷாஹ்ருக் என்கிற பெயரில் அதிரை நிருபர் , திண்ணை, சத்திய மார்க்கம் ஆகிய வலைதளங்களில் கவிதைகளைப் படைத்து வருகிறார். தற்போது ஷார்ஜாவில் ஒரு மிகப் பெரிய கன ரக வாகனங்களை விற்பனை செய்து வரும் நிறுவனத்தின் பணிமனை மேலாளராக பணியாற்றி வருகிறார். எளிய மொழிநடையில் இலகுவான வார்த்தைகளைக் கொண்டு மனத்தில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் எழுதுவது இவர் பாணி.

“அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்‘ என்று தொடங்கும் இவரது கவிதை துபாயில் நடைபெற்ற அதிரையின் அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் தொடக்க விழாவில் வாசிக்கப்பட்டு பலராலும் பாராட்டப்பட்டது.

மிகவும் எளிமையான வார்த்தைகளால் உயர்ந்த மனிதப் பண்புகளை கவிதையாக வெளிப்படுத்துவது கவிஞர் சபீர் அவர்களின் தனிச் சிறப்பு. குறிப்பாக அதிரையின் சிறப்புகள், குடும்ப நலன், மன உணர்வின் மேம்பாடுகள், இஸ்லாமிய மார்க்கம் சார்ந்த கவிதைகள் உள்ளிட்டவற்றை எழுதி வரும் பணிக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் குணசீலன் வழங்கி கெளரவித்தார். விருதினை கவிஞர் சபீர் அஹ்மது அபு ஷாஹ்ருக் சார்பில், இவரது உறவினர் அஹமது இப்ராஹீம் பெற்றுச்சென்றார்.

8 comments:

  1. எனது இனிய நண்பன் சயீருக்கு இவ்விருது கிடைத்ததில் நான் பெருமிதம் கொள்கிறேன். மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நண்பா.

    ReplyDelete
  2. மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஹைக்கூ கவிதைகள், இலக்கியம், குறும்படங்கள் தயாரிப்பு , நாவல் போன்ற நூல்களை எழுதுபவர்களை கொண்ட நமதூரில் ஏன் வெளியில் பிரபலமாகவில்லை. திரைப்படம் , சின்ன திரை போன்றவற்றில் கால்பதிக்காதது வியப்பாக உள்ளது. கண்ணுக்கு மை அழகு ......கவிதைக்கு பொய் அழகு ...... அப்படியென்றால் கவிஞர் பொய் சொல்லுபவரா?

    குடும்ப நலன், மன உணர்வின் மேம்பாடுகள் பற்றி கவிதைகளாக படைத்து வரும் எங்களது சபீர் அபு ஷாஹ்ருக் அவர்களுக்கு கைத்தட்டுகளும், பாராட்டுகளும்.

    ReplyDelete

  3. நன்றி!

    கண்ணுக்கெட்டா தூரத்தில்
    கடலில் பெய்த மழையின்
    ஒரு துளி நான்

    எனைக்
    கண்டெடுத்து
    முத்தென அறிவிக்கிறீர்கள்

    உறுதிமொழி!

    சிறு துளியாயினும்
    சமூக
    தொத்துவியாதிகள் நீங்க
    சொட்டு மருந்தென
    சுட்டும் என் எழுத்து
    என உறுதியளிக்கிறேன்.

    ReplyDelete
  4. தன்னுடைய பணிக்கு தொடர்பு இல்லாத ஒன்றில்(it is big matter) விருது தாங்கள் பெற்றுள்ளது தங்களின் தமிழ்பற்று ,கவிதைகளின்ஆழம்,சமுதாயசிந்தனை,இதனை பறைசாற்றி விருது பெருமை அடைந்துள்ளது,அதிரைநியூஸ்,தங்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. மருமகன்-கவிஞர்சபீர்அபுசாருக்குநெஞ்ஜார்ந்தவாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. மழைத்துளி...
    மனதில் துளியாகத்தான்
    விழைந்தே
    விரவிடும் அறிவுகள்

    அதனால்
    அவர் மழைத்துளியே

    மழைத்துளி
    மகிமையில் சிப்பியில்
    தழைத்திடும்
    தகதகக்கும் முத்து

    அதனால்
    அவரை முத்தாகக் கண்டனரோ

    முத்துக்களை
    முடிந்த மாலையாக
    வித்தகர்
    வெளிப்படுத்தினப் பதில்...

    அதிலும்
    அவரையே அழைத்தார்

    புத்தியில்
    பூத்த அவர்புதுமை
    வித்திட
    வியாதி நீக்கிடுமாம்

    ஆம் !
    அவரே
    அந்த சொட்டுமருந்தாம்.

    சொட்டுக்களே
    சுகமான மழையானதால்
    பட்டென
    பதிந்தாரோ ! தனை...

    அந்த
    அறிவு மழைத்துளியாய் !

    அறிஞன்
    அலசலில் அங்கும்
    அறிவுகள்
    அழகாய் மின்னுதே.

    ReplyDelete
  7. அன்பின் தம்பி சபீர்!

    சின்னஞ்சிறு துளியில் ஒரு உலகம் உருவாகும் .

    தங்களுடைய திறமைகளை இவ்வளவு நாள் கண்டுகொள்ளாமல் இருந்ததே இந்த ஊர் செய்த குற்றம். இது ஒரு ஆரம்பம். உங்களுக்கு இன்னும் பல விருதுகள் கிடைக்க வாழ்த்துகிறேன்.

    தகுதி படைத்த கவிஞரை இனம் கண்டவர்களில் ஒருவன் என்ற முறையில் பெருமைப் படுகிறேன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.