.

Pages

Thursday, May 21, 2015

SSLC தேர்வில் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைபள்ளி மாணவ மாணவிகள் நிகழ்த்திய சாதனை !

தமிழகமெங்கும் SSLC தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது. இந்த தேர்வில் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைபள்ளியின் சார்பில் மொத்தம் 82 பேர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 94 சதவீத மதிப்பெண்கள் பெற்று பள்ளி சாதனை  நிகழ்த்தியுள்ளது.

இதில் பள்ளியளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள மாணவிகளின் விவரங்கள்:
முதல் இடம் :
பெயர் : பாலாஜி
பெற்ற மதிப்பெண்கள் : 484 / 500

இரண்டாம் இடம் ( இருவர் ) :
பெயர் : அமீர் ஹம்சா , நசீஹா
பெற்ற மதிப்பெண்கள் : 480 / 500

மூன்றாம் இடம் : ( மூவர் ) 
பெயர் : சாமியா ,ரூமானா,  தஹ்சீன்
பெற்ற மதிப்பெண்கள் : 476 / 500

6 comments:

  1. வாழ்த்துகள்....

    ReplyDelete
  2. மேலும் சாதனைகள் புரிய என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மீண்டும் சாதனை புரிய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. தமிழ்நாட்டில் கல்வியின் நிலைமை மிக மோசமாக போய்க் கொண்டு இருக்கிறது, பாடத்தை உணர்ந்து படிக்காமல் வெறும் கேள்வி பதில் முரையெய் எடுத்து படிக்கிறார்கள் இப்படியே போய்க் கொண்டு இருந்தால் 100% தேர்ச்சி மட்டுமே இருக்கும் ஆனால் பாடத்தை உணர்த்து படிக்கும் முறை அழிந்து மாணவர்கள் ஒரு மனிதன் போல் இல்லாமல் இயந்திரமாக மாறி விடுவார்கள், இது எதிர்காலத்தில் தொழில் முனைவோரை உருவாகாமல் தொழிலாளரை தான் உருவாக்கும். இதை உணர்ந்து கல்வி மற்றும் தேர்வு முறையில் மாற்றங்கள் கொண்டு வருவது மிக மிக அவசியம். தமிழ் நாடு கல்வி அமைச்சகம் சிந்திக்குமா?

    வெற்றிபெற்ற எல்லா மாணவ மணிகளுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. சாதனை படைத்த.மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்.

    மேலும் பல சாதனைகளை படைக்க இப்பொழுதே தயார் படுத்திக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  6. வெற்றிபெற்ற எல்லா மாணவ மணிகளுக்கும் வாழ்த்துக்கள்.

    ஜனாப் மஸ்தான் கனியின் சிந்தனை அவசியம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அரசு கவனிக்குமா ?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.