அதிராம்பட்டினம், பிப்-13
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி தேசிய மாணவர் படை, இளைஞர் செஞ்சிலுவை சங்கம், கல்லூரி தன்னார்வ இரத்த கொடையாளர்கள், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பு ஆகியோர் சார்பில் இரத்த வகை கண்டறியும் முகாம் கல்லூரி அரங்கில் திங்கட்கிழமை நடைபெற்றது.
முகாமை கல்லூரி முதல்வர் ஏ.எம் உதுமான் முகையதீன் தொடங்கி வைத்தார். மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பு மருத்துவ ஆய்வகக் குழுவினர் மாணவ, மாணவிகளுக்கு இரத்த பரிசோதனைகளை மேற்கொண்டனர். முகாம் ஏற்பாட்டினை காதிர் முகைதீன் கல்லூரி தேசிய மாணவர் படை அலுவலர் மேஜர் பி. கணபதி செய்தார்.
இம்முகாமில் கல்லூரி பேராசிரியர்கள் கே. முருகானந்தம், கே.செய்யது அகமது கபீர், பேராசிரியை சித்ரா, ஓ.சாதிக், திட்ட மேலாளர் ஆர்.செந்தில்குமார், அரசு மருத்துவமனை ஆலோசகர் ஜெயபாரதி, தொழில்நுட்ப அலுவலர் கலையரசி, சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கல்லூரி மாணவ, மாணவிகள் 325 பேர் முகாமில் கலந்து கொண்டு இரத்த வகை கண்டறிந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி தேசிய மாணவர் படை, இளைஞர் செஞ்சிலுவை சங்கம், கல்லூரி தன்னார்வ இரத்த கொடையாளர்கள், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பு ஆகியோர் சார்பில் இரத்த வகை கண்டறியும் முகாம் கல்லூரி அரங்கில் திங்கட்கிழமை நடைபெற்றது.
முகாமை கல்லூரி முதல்வர் ஏ.எம் உதுமான் முகையதீன் தொடங்கி வைத்தார். மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பு மருத்துவ ஆய்வகக் குழுவினர் மாணவ, மாணவிகளுக்கு இரத்த பரிசோதனைகளை மேற்கொண்டனர். முகாம் ஏற்பாட்டினை காதிர் முகைதீன் கல்லூரி தேசிய மாணவர் படை அலுவலர் மேஜர் பி. கணபதி செய்தார்.
இம்முகாமில் கல்லூரி பேராசிரியர்கள் கே. முருகானந்தம், கே.செய்யது அகமது கபீர், பேராசிரியை சித்ரா, ஓ.சாதிக், திட்ட மேலாளர் ஆர்.செந்தில்குமார், அரசு மருத்துவமனை ஆலோசகர் ஜெயபாரதி, தொழில்நுட்ப அலுவலர் கலையரசி, சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கல்லூரி மாணவ, மாணவிகள் 325 பேர் முகாமில் கலந்து கொண்டு இரத்த வகை கண்டறிந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.