அதிரை நியூஸ்: பிப்-13
துபாயில் அமீரகத்தை சேர்ந்த ஒருவரின் மகன்கள் போக்குவரத்து குற்றங்களில் ஈடுபட்டதற்காக 3 மாதங்களுக்கு அவரது லைசென்ஸ் முடக்கப்பட்டதுடன் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த போக்குவரத்து குற்றங்கள் அனைத்தும் அந்த இமராத்திக்கு சொந்தமான 3 கார்களை கொண்டு ஏற்படுத்தப்பட்டதாகும்.
துபை போக்குவரத்து துறைக்கு வந்த தந்தை அந்தக் குற்றங்கள் அனைத்தும் தனது மகன்களால் ஏற்படுத்தப்பட்டது என்றும் எனவே, தன்னுடைய டிரைவிங் லைசென்ஸ் முடக்கத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார். போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அவருடைய மகனை அழைத்து வருமாறும், அவர்கள் குற்றமிழைத்ததை ஒப்புக்கொண்டால் டிரைவிங் லைசென்ஸ் முடக்கத்திற்கு காரணமான கரும்புள்ளிகளை அவர்களுடைய டிரைவிங் லைசென்ஸ் மீது மாற்றித் தருவதாக கூறியதையடுத்து மகன்களை காட்டிக்கொடுக்க விரும்பாத தந்தை தண்டனையை அவரே ஏற்றுக்கொண்டார்.
36 கரும்புள்ளிகளை பெறும் வாகன ஓட்டிகளுடைய லைசென்ஸ் முடக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
முதன்முறையாக 36 கரும்புள்ளிகள் பெறுபவர்களின் டிரைவிங் லைசென்ஸ் 3 மாதங்களுக்கு முடக்கபடுவதுடன் 520 திர்ஹம் அபராதமும் செலுத்த வேண்டும், இரண்டாவது முறையாக 36 கரும்புள்ளிகள் பெறுபவர்களின் டிரைவிங் லைசென்ஸ் 6 மாதங்களுக்கு முடக்கப்படுவதுடன் 720 திர்ஹம் அபராதமும் செலுத்த வேண்டும், மூன்றாம் முறையாகவும் 36 கரும்புள்ளிகள் பெறுபவர்களின் டிரைவிங் லைசென்ஸ் 1 வருடத்திற்கு முடக்கப்படுவதுடன் 1,020 திர்ஹம் அபராதமும் செலுத்த வேண்டும்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
துபாயில் அமீரகத்தை சேர்ந்த ஒருவரின் மகன்கள் போக்குவரத்து குற்றங்களில் ஈடுபட்டதற்காக 3 மாதங்களுக்கு அவரது லைசென்ஸ் முடக்கப்பட்டதுடன் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த போக்குவரத்து குற்றங்கள் அனைத்தும் அந்த இமராத்திக்கு சொந்தமான 3 கார்களை கொண்டு ஏற்படுத்தப்பட்டதாகும்.
துபை போக்குவரத்து துறைக்கு வந்த தந்தை அந்தக் குற்றங்கள் அனைத்தும் தனது மகன்களால் ஏற்படுத்தப்பட்டது என்றும் எனவே, தன்னுடைய டிரைவிங் லைசென்ஸ் முடக்கத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார். போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அவருடைய மகனை அழைத்து வருமாறும், அவர்கள் குற்றமிழைத்ததை ஒப்புக்கொண்டால் டிரைவிங் லைசென்ஸ் முடக்கத்திற்கு காரணமான கரும்புள்ளிகளை அவர்களுடைய டிரைவிங் லைசென்ஸ் மீது மாற்றித் தருவதாக கூறியதையடுத்து மகன்களை காட்டிக்கொடுக்க விரும்பாத தந்தை தண்டனையை அவரே ஏற்றுக்கொண்டார்.
36 கரும்புள்ளிகளை பெறும் வாகன ஓட்டிகளுடைய லைசென்ஸ் முடக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
முதன்முறையாக 36 கரும்புள்ளிகள் பெறுபவர்களின் டிரைவிங் லைசென்ஸ் 3 மாதங்களுக்கு முடக்கபடுவதுடன் 520 திர்ஹம் அபராதமும் செலுத்த வேண்டும், இரண்டாவது முறையாக 36 கரும்புள்ளிகள் பெறுபவர்களின் டிரைவிங் லைசென்ஸ் 6 மாதங்களுக்கு முடக்கப்படுவதுடன் 720 திர்ஹம் அபராதமும் செலுத்த வேண்டும், மூன்றாம் முறையாகவும் 36 கரும்புள்ளிகள் பெறுபவர்களின் டிரைவிங் லைசென்ஸ் 1 வருடத்திற்கு முடக்கப்படுவதுடன் 1,020 திர்ஹம் அபராதமும் செலுத்த வேண்டும்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.