.

Pages

Monday, February 13, 2017

தஞ்சை மாவட்டத்தில் ஊரக வேலை உறுதி திட்டம் 150 நாட்களாக அதிகரிப்பு !

2016-17ம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் குடும்பம் ஒன்றிற்கு 100 நாட்களிலிருந்து 150 நாட்களாக அதிகரித்து தமிழக அரசு உத்தரவு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

பருவ மழை பொய்த்ததன் காரணமாக நிலவிவரும் கடும் வறட்சியைக் கருத்தில் கொண்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதித்திட்டத்தின்கீழ் பணிபுரியும் குடும்பங்களுக்கு 2016-17ம் ஆண்டில் குடும்பம் ஒன்றிற்கு 100 நாட்களிலிருந்து 150 நாட்களாக அதிகரித்து தமிழக அரசு உத்தரவுகள் வழங்கியுள்ளது.

அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 14 வட்டாரங்களிலும், மகாத்மாகாந்தி தேசியஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பதிவு பெற்றுள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும், குடும்பம் ஒன்றிற்கு 150 நாட்கள்வரை வேலை வழங்கப்படும் என இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.

இந்த உத்தரவானது 31.03.2017 வரையிலான காலத்துக்கு பொருந்தும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்.
*File Image

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.