.

Pages

Monday, February 13, 2017

தஞ்சை மாவட்டத்தில் தரமற்ற உணவுப்பொருள் விற்பனை: ரூ 54 ஆயிரம் அபராதம் !

உணவுப்பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 ன் பிரிவு 51 மற்றும் 52 ஆகியவற்றில் முறையே தரக்குறைவு (Substandard) மற்றும் தப்புக் குறியீடு (Misbranded ) ஆகியவற்றுடன் உணவுப் பொருட்களை தயாரித்தாலோ. விநியோகம் செய்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ தரக்குறைவு பொருட்களுக்கு அபராதமாக ரூ 5,00,000-/ வரையிலும். தப்புக்குறியீடு உள்ள பொருட்களுக்கு  ரூ 3,00,000-/ வரையிலும் அபராதம் விதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது,
   
அதன்படி. உணவுபாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 ன் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கி வரும் நான்கு வணிக நிறுவனங்களில் பொதுமக்களுக்கு தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. உணவு பாதுகாப்பு அலுவலர்களால் கண்டறியப்பட்டதால், உணவுபாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 ல் பிரிவு 51 ன் கீழ் தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர். கூடுதல் மாவட்ட குற்றவியல் நடுவர் மற்றும் தீர்ப்பு அலுவலரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு. குற்றச்செயலில் ஈடுபட்ட கடை உரிமையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கு ரூ 54,000-/  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எனவே. தரமற்ற உணவுப் பொருட்களை தயாரித்தல். விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற குற்ற நிகழ்வுகளில் ஈடுபடும் விற்பனை நிலையங்களின் பேரில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், தரமான உணவுப்பொருட்களை மட்டும் வாங்கி பயன்படுத்திடுமாறும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ,அண்ணாதுரை அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.