.

Pages

Tuesday, February 14, 2017

அபுதாபியில் சிறைபட்டிருந்த இந்தியரை மீட்ட மனிதநேயர் !

அதிரை நியூஸ்: பிப்-14
சவுதியைச் சேர்ந்த அரேபியர் அயாதா குதைர் அல் ரம்மாலி (Ayada Khodeir Al Rammali). இவரிடம் இந்தியாவைச் சேர்ந்த யாஸீன், அனீஸா தம்பதியர் பணிபுரிந்து வருகின்றனர். இத்தம்பதியின் மகன் அலி என்பவர் அமீரகம், அபுதாபியில் பணிபுரிந்து வந்தார்.

அலி அபுதாபியில் பணிபுரிந்து வந்த நிலையில் அவருடன் பணியாற்றிய பாகிஸ்தான் நாட்டவருடன் கைகலப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சுமார் 2 மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால் மகனை குறித்த எந்தத் தகவலையும் பெற முடியாமல் பெற்றோர் கலங்கினர். இறுதியாக, தங்களுக்கு உதவும்படி தங்களின் முதலாளி அயாதா குதைர் அல் ரம்மாலியிடம் வேண்டினர்.

தங்கள் ஊழியர்களின் துயர் தீர்ப்பதற்காக நாடு விட்டு நாடு பறந்து வந்து அபுதாபியின் பல போலீஸ் நிலையங்கள் மற்றும் சிறைச்சாலைகளில் அலியை தேடினார் அயாதா. இறுதியில் அபுதாபியிலிருந்து 30 கி.மீ தொலைவிலுள்ள விசாரணை கைதிகளுக்கான மையத்தில் அலி கண்டுபிடிக்கப்பட்டு அவருக்குத் தேவையான சட்ட உதவிகளை செய்தநிலையில், வழக்கில் சம்பந்தப்பட்ட பாகிஸ்தானி நபரும் தனது வழக்கை வாபஸ் வாங்கி உதவியதை தொடர்ந்து அலி சிறையிலிருந்து விடுதலையானார்.

அலியை சிறைமீட்க தனக்கு உதவிய அமீரக அதிகாரிகள் மற்றும் சிறை துறையினருக்கும் அயாதா குதைர் அல் ரம்மாலி அவர்கள் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். இந்த மனிதநேயர் மீது எல்லாம் வல்ல ரஹ்மானும் இரக்கம் கொள்வானாக!

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

2 comments:

  1. மாஷா அல்லாஹ் அவருக்கு நல் பதவி கிடைக்கும்

    ஆனால் சவுதி அரேபியாவில் கத்தாமா என்ற வீட்டு வேலை செய்யும் வேலையாள் படும் கஷ்டத்தை பற்றியும் இங்கு கூற வேண்டும்

    பாவாம் பல பெண்கள் தங்கள்வேலைக்கு நியாயமன ஊதியம் கூட கிடைப்பதில்லை


    நான் அ.மு.சாகுல் ஹமிது அதிரை

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் அவருக்கு நல் பதவி கிடைக்கும்

    ஆனால் சவுதி அரேபியாவில் கத்தாமா என்ற வீட்டு வேலை செய்யும் வேலையாள் படும் கஷ்டத்தை பற்றியும் இங்கு கூற வேண்டும்

    பாவாம் பல பெண்கள் தங்கள்வேலைக்கு நியாயமன ஊதியம் கூட கிடைப்பதில்லை


    நான் அ.மு.சாகுல் ஹமிது அதிரை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.