அதிராம்பட்டினம், பிப்-01
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மூத்த தலைவரும், கேரள மாநிலம், மலப்புரம் மக்களவைத் தொகுதியின் உறுப்பினரான இ.அகமது (78 ) உடல் நலம் பாதிப்படைந்து நேற்று இரவு உயிரிழந்தார். இவர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் இருந்தபோது வெளியுறவுத்துறை இணை அமைச்சராக பதவி வகித்தவர் ஆவார்.
இதையொட்டி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிராம்பட்டினம் பேரூர் அலுவலகத்தில் இரங்கல் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு அக்கட்சியின் அதிரை பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் தலைமை வகித்தார். அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் எஸ்எஸ்பி நசுருதீன் இரங்கல் உரை நிகழ்த்தினார். கட்சி அலுவலகத்தில் உள்ள முஸ்லீம் லீக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிட்டனர். மேலும் கட்சியினர் மறைந்த இ.அகமது மறுமை வாழ்வு சிறக்க சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
முன்னதாக அக்கட்சியின் அதிரை பேரூர் செயலர் சேக் அப்துல்லா வரவேற்றார். முடிவில் மாவட்ட இளைஞர் அணி பொறுப்பாளர் சாகுல்ஹமீது நன்றி கூறினார். இக்கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மூத்த தலைவரும், கேரள மாநிலம், மலப்புரம் மக்களவைத் தொகுதியின் உறுப்பினரான இ.அகமது (78 ) உடல் நலம் பாதிப்படைந்து நேற்று இரவு உயிரிழந்தார். இவர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் இருந்தபோது வெளியுறவுத்துறை இணை அமைச்சராக பதவி வகித்தவர் ஆவார்.
இதையொட்டி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிராம்பட்டினம் பேரூர் அலுவலகத்தில் இரங்கல் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு அக்கட்சியின் அதிரை பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் தலைமை வகித்தார். அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் எஸ்எஸ்பி நசுருதீன் இரங்கல் உரை நிகழ்த்தினார். கட்சி அலுவலகத்தில் உள்ள முஸ்லீம் லீக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிட்டனர். மேலும் கட்சியினர் மறைந்த இ.அகமது மறுமை வாழ்வு சிறக்க சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
முன்னதாக அக்கட்சியின் அதிரை பேரூர் செயலர் சேக் அப்துல்லா வரவேற்றார். முடிவில் மாவட்ட இளைஞர் அணி பொறுப்பாளர் சாகுல்ஹமீது நன்றி கூறினார். இக்கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.