மருத்துவர்கள் தருகின்ற ஆண்டிபயாடிக்ஸ் (Antibiotics) எண்ணிக்கையை நாமாகவே குறைத்து வாங்குகின்றோம். உதாரணமாக மருத்துவர் 6 அல்லது 10 என்று எழுதினால் அதை 3 அல்லது 5 என்று நாமாக குறைத்து மருந்தகத்தில் வாங்குகின்றோம்.
ஒவ்வொரு ஆண்டிபயாடிக்ஸ்க்கும் (Antibiotics) சில தன்மை இருக்கிறது. அதற்கு ஏற்றவாறே மருத்துவர்கள் எண்ணிக்கையை நிர்ணயம் செய்கின்றனர். ஒரு சில ஆண்டிபயாடிக்ஸ் (Antibiotics)3 நாட்கள் அல்லது 6 நாட்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நாம் அந்த எண்ணிக்கையை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் நாமாகவே எண்ணிக்கையை குறைத்து உட்கொள்வதால் நம்மை தாக்கிய கிருமியானது தன் அமைப்பை (Structure) மாற்றி கொண்டு அந்த ஆண்டிபயாடிக்ஸ்க்கு (Antibiotics) எதிராக (Drug resistance) செயல்பட தொடங்குகிறது. நாம் 2 அல்லது 3 மாத்திரைகளை மட்டும் உட்கொள்ளும் போது அந்த கிருமிகள் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகளை குறைத்து கொண்டது போன்று இருந்தாலும் உடம்பில் அந்த கிருமி இருந்து கொண்டே இருக்கும். பின்பு நம் உடல் மழைகாலம் பனிக்காலம் அல்லது கோடை காலம் இவைகளை சந்திக்கும்போது, முழுமையாக நம் உடலை விட்டு அழியாத அந்த கிருமிகள் மறுபடியும் இருமல், சளி, காய்ச்சல் போன்ற நோய் மற்றும் அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. நம் உடலில் அடிக்கடி இதுபோன்ற நோய் மற்றும் அறிகுறிகள் வருவதற்கு இதுவும் ஒரு காரணமாகிறது.
பின்பு அதே ஆண்டிபயாடிக்ஸ்(Antibiotics) அல்லது வேறு ஆண்டிபயாடிக்ஸ் உட்கொள்ளும் போது அந்த கிருமிக்கு எதிராக செயல்பட முடிவதில்லை. இதனால் நாம் இந்த மருத்துவரிடம் சென்றால் உடல்நிலை சரியாகாது என்று வேறு மருத்துவரை அனுகுகிறோம்.பின்பு அந்த மருத்துவரின் சிகிச்சை முறை சரி இல்லை என்று வேறு ஒரு மருத்துவரை நாடுகிறோம்.
முந்தைய இயலாமை காலத்தில் தந்த அனைத்து ஆண்டிபயாடிக்ஸ் (Antibiotics) நாம் முறையாக உட்கொள்ளாததால் Drug resistance bacteria உடலில் உருவானதை அறிவதற்குள் மருத்துவருக்கு சிறிது தடுமாற்றம் ஏற்படுகிறது. Drug resistance bacteria உடலில் இருப்பதை உணர்ந்து அந்த கிருமிக்கு எதிராக முறையான சிகிச்சை அளிக்கும் வரை நம் உடலில் இருந்து கொண்டு தான் இருக்கும்.
சாதாரணமாக நாம் ஆண்டிபயாடிக்ஸ் எடுத்துக்கொள்ளும் போது உணவுச் செரிமான உறுப்புகளில் இருக்கும் மைக்ரோ ஃபளொரா (microflora) வை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடும். இதனால் நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள தேவையான சத்துக்களை உறிஞ்சுவதில் பிரச்சினை ஏற்படுகிறது. இந்த microflora, நாம் தயிர் வகைகள் அதிகம் எடுத்து கொள்வது மூலமும் ஃபிரி மற்றும் ஃபரோ பயாடிக்ஸ் ( pre and probiotics) மாத்திரைகள் எடுத்து கொள்வதன் மூலமும் மைக்ரோ ஃபளொரா (microflora) பாதுகாக்க படுகிறது.
ஆண்டிபயாடிக்ஸ், மைக்ரோ ஃபளொராவை அழிக்காமல் உடம்பில் உள்ள பாதிப்பை தரும் கிருமிகளை மற்றும் எப்படி அழிப்பது என்பதை பற்றியான ஆராய்ச்சியில் மருத்துவ உலகம் ஈடுபட்டு கொண்டுதான் இருக்கிறது. அது ஒரு புறம் இருக்க மருத்துவர் அறிவுரைக்கும் ஆண்டிபயாடிக்ஸின் கால வரையறையை முறையாக நிறைவு செய்யும்போது நம் உடம்பில் இருக்கும் நோய் கிருமியை முழுமையாக அழித்துவிடும்.அதன்பின் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பானது (immune system) நோய் கிருமி எளிதில் நம் உடலை தாக்காதவாறு பாதுகாக்கிறது. இதனால் நமக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய் மற்றும் அறிகுறிகள் எளிதில் வராமல் பாதுகாக்கப்படும்.
மருத்துவர் தரும் ஆண்டிபயாடிக்ஸின் எண்ணிக்கையையும், கால வரையையும் முறையாக நிறைவு செய்வதன் மூலம் நோயற்ற வாழ்வுடன் வாழ்வோம்.
அதிரை எம்.எஃப் முஹம்மது ஹுசைன்
( மருத்துவ மாணவர் )
Doctor 👨⚕️ sir super
ReplyDeleteMasha Allah
ReplyDeleteClear screen article
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteMasha allah .... great ....
ReplyDelete