அதிரை நியூஸ்: பிப்-12
இந்தியவின் பெருமைமிகு பழமையான கார்களான அம்பாஸடர் பிராண்ட் கார்களை தயாரித்து வந்த ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் தனது அம்பாஸடர் தயாரிப்புக்கான உரிமைகளை வெறும் 12 மில்லியன் டாலருக்கு பிரான்ஸின் பீஜியோ கார் (Peugeot) நிறுவனத்திடம் விற்றுவிட்டது (இந்திய மதிப்பில் சுமார் 800 மில்லியன் ரூபாய்கள் மட்டுமே), அதாவது வந்த விலைக்கு தள்ளிவிட்டுள்ளது. இந்த விலை குறைவான விற்பனை ஒப்பந்தத்தை நியாயப்படுத்த நாங்கள் 3 ஆண்டுகளுக்கு முன்பே அம்பாஸடர் கார் தயாரிப்பை முற்றிலும் நிறுத்தி விட்டோம் என்றும் விளக்கமளித்துள்ளது.
பன்னாட்டு கார் கம்பெனிகளின் வரவால் தனது விற்பனை சந்தையை இழந்த அம்பாஸடர் மாடல் கார்கள் நவீன தேவைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளவேயில்லை, மேலும் இந்த அம்பாஸடர் மாடல்கள் பிரிட்டனின் மோரீஸ் ஆக்ஸ்போர்டு (Morris Oxford) என்ற கார் மாடலை அடிப்படையாக கொண்டு இந்தியாவில் நீண்டகாலமாக தயாரிக்கப்பட்டு வந்தது. இதன் கடின உழைப்பிற்காகவே அம்பாஸடர் கார்களை விரும்பி வாங்கும் வாடிக்கையாளர்கள் இன்னும் உள்ளனர்.
ஏற்கனவே, பீஜியோ (Peugeot) மற்றும் சிட்ரோன் (Citroen) மாடல்களை தயாரித்து வரும் பிரான்ஸ் நிறுவனம் இந்தியாவில் இரு இடங்களில் ஹிந்துஸ்தான் நிறுவனத்துடன் இணைந்து 2 கார் ஆலைகளை துவக்க திட்டமிட்டுள்ளது என்றாலும் இங்கு என்ன வகையான கார்கள் தயாரிக்கப்படும் என தெளிவுபடுத்தவில்லை. இந்த கூட்டு திட்டத்தின் மூலம் 2020 ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு 100,000 லட்சம் கார்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே, இந்தியாவில் தொழில் துவங்கிய பீஜியோ நிறுவனம் தனது இந்திய கூட்டாளிகளுடன் ஏற்பட்ட முறுகலால் 1997 ஆம் ஆண்டே இந்தியாவை விட்டு வெளியேறிய நினைவுகூரத்தக்கது.
எது எப்படியோ! அம்பாஸடர் காதலர்களுக்கு வருத்தம் இருக்கவே செய்யும்.
Sources: AFP / Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
இந்தியவின் பெருமைமிகு பழமையான கார்களான அம்பாஸடர் பிராண்ட் கார்களை தயாரித்து வந்த ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் தனது அம்பாஸடர் தயாரிப்புக்கான உரிமைகளை வெறும் 12 மில்லியன் டாலருக்கு பிரான்ஸின் பீஜியோ கார் (Peugeot) நிறுவனத்திடம் விற்றுவிட்டது (இந்திய மதிப்பில் சுமார் 800 மில்லியன் ரூபாய்கள் மட்டுமே), அதாவது வந்த விலைக்கு தள்ளிவிட்டுள்ளது. இந்த விலை குறைவான விற்பனை ஒப்பந்தத்தை நியாயப்படுத்த நாங்கள் 3 ஆண்டுகளுக்கு முன்பே அம்பாஸடர் கார் தயாரிப்பை முற்றிலும் நிறுத்தி விட்டோம் என்றும் விளக்கமளித்துள்ளது.
பன்னாட்டு கார் கம்பெனிகளின் வரவால் தனது விற்பனை சந்தையை இழந்த அம்பாஸடர் மாடல் கார்கள் நவீன தேவைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளவேயில்லை, மேலும் இந்த அம்பாஸடர் மாடல்கள் பிரிட்டனின் மோரீஸ் ஆக்ஸ்போர்டு (Morris Oxford) என்ற கார் மாடலை அடிப்படையாக கொண்டு இந்தியாவில் நீண்டகாலமாக தயாரிக்கப்பட்டு வந்தது. இதன் கடின உழைப்பிற்காகவே அம்பாஸடர் கார்களை விரும்பி வாங்கும் வாடிக்கையாளர்கள் இன்னும் உள்ளனர்.
ஏற்கனவே, பீஜியோ (Peugeot) மற்றும் சிட்ரோன் (Citroen) மாடல்களை தயாரித்து வரும் பிரான்ஸ் நிறுவனம் இந்தியாவில் இரு இடங்களில் ஹிந்துஸ்தான் நிறுவனத்துடன் இணைந்து 2 கார் ஆலைகளை துவக்க திட்டமிட்டுள்ளது என்றாலும் இங்கு என்ன வகையான கார்கள் தயாரிக்கப்படும் என தெளிவுபடுத்தவில்லை. இந்த கூட்டு திட்டத்தின் மூலம் 2020 ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு 100,000 லட்சம் கார்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே, இந்தியாவில் தொழில் துவங்கிய பீஜியோ நிறுவனம் தனது இந்திய கூட்டாளிகளுடன் ஏற்பட்ட முறுகலால் 1997 ஆம் ஆண்டே இந்தியாவை விட்டு வெளியேறிய நினைவுகூரத்தக்கது.
எது எப்படியோ! அம்பாஸடர் காதலர்களுக்கு வருத்தம் இருக்கவே செய்யும்.
Sources: AFP / Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.