தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அதிராம்பட்டினம் கிளை-1 சார்பில் 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' எனும் தலைப்பில் இஸ்லாமிய மார்க்கம் சம்பந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சி இன்று சாரா திருமண மஹாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அதிராம்பட்டினம் கிளை-1 தலைவர் எம்.கே.எம் ஜமால் முஹம்மது தலைமை வகித்தார். தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் முஜீபுர் ரஹ்மான், செயலாளர் சேக்தாவூது, ராஜிக் அகமது, துணைத்தலைவர் சாதிக்பாட்சா மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அவ்வமைப்பின் மாநில தணிக்கை குழுத்தலைவர் எம்.எஸ் சையது இப்ராஹீம் கலந்துகொண்டு கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் எழுப்பிய இஸ்லாம் தொடர்பான குற்றச்சாட்டுகள், சந்தேகங்கள், ஆட்சேபனைகள் குறித்த கேள்விகளுக்கு நேரடியாக பதிலளித்து பேசினார்.
கேள்வி எழுப்பிய அனைவருக்கும் திருக்குர்ஆன் தமிழாக்கம், மாமனிதர் நபிகள் நாயகம், மற்றும் இஸ்லாம் மார்க்கம் தொடர்பான விளக்க நூல்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.