.

Pages

Tuesday, February 14, 2017

குட்டி விமானங்களை வேட்டையாடும் பயிற்சி பெற்ற கழுகுகள் ( வீடியோ )

அதிரை நியூஸ்: பிப்-14
டிரோன்ஸ் (drones) எனப்படும் சிறிய ரக விமானங்கள் விளையாட்டுப் பொருளாகவே அறிமுகமானாலும் தற்போது விணையாகி சர்வதேச அரசுகளுக்கும் தலைவலியை தந்து கொண்டுள்ளது. இத்தகைய குட்டி விமானங்கள் விமான நிலையப் பகுதிகள், அரசு முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாக்கப்பட்ட பகுதிகள், தனி நபர்களை கண்காணிப்பதால் பாதிக்கப்படும் அந்தரங்கங்கள் என்பதற்கு மேலாக தீவிரவாத அச்சுறுத்தல்கள் என அதன் தீமைகளை பட்டியலிடலாம். இதனால் உலகின் பல நாட்டு அரசுகளும் குட்டி விமானங்களை தனியார்கள் இயக்குவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன என்றாலும் முழுமையாக தடை விதிக்கவும் இல்லை.

இந்நிலையில், நெதர்லாந்து அரசு அத்துமீறும் குட்டி விமானங்களை கண்டறிந்து வேட்டையாடுவதற்காக 'Guard from Above) என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து 'பால்டு ஈகிள்ஸ்' (Bald Eagles) எனப்படும் இளம் பருந்துகளை பழக்கியுள்ளனர். இந்தப் பருந்துகள் தடை விதிக்கப்பட்ட பகுதிகளுக்குள் அத்துமீறி நுழையும் டிரோன்களை பிற பறவைகளை வேட்டையாடி வீழ்த்துவது போல் வீழ்த்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் டிரோன்களை கொண்டு வந்து சேர்க்கும்.

வேட்டையாடும் போது டிரோன்களால் பருந்துகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அதன் கால்களுக்கு சிறப்பு உரைகள் அனிவிக்கபட்டுள்ளன. வட அமெரிக்கா பிரதேசத்திலிருந்து கொண்டு வரப்பட்டு நெதர்லாந்தில் பயிற்சியளிக்கப்பட்ட பருந்துகளை பற்றி கேள்விப்பட்ட அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் பல நெதர்லாந்திடம் தங்களுக்கு இதுபோன்ற பயிற்சிகளை தர வேண்டிக் கொண்டுள்ளன.

சிறிய வீடியோ கிளிப்:


Source: CNBC
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.