.

Pages

Tuesday, April 18, 2017

வீட்டுப்பணிப் பெண்ணின் திருமணச் செலவினை ஏற்று நடத்தி வைத்த சவூதி எஜமானி !

அதிரை நியூஸ்: ஏப்-18
செங்கடல் நகரான ஜித்தா மாநகரில் வாழும் பெயர் குறிப்பிட விரும்பாத சவுதி எஜமானி ஒருவர் தன் வீட்டுப்பணிப் பெண்ணுக்கு அவரது முழு திருமணச் செலவையும் ஏற்று திருமணம் நடத்தி வைத்துள்ளார். மேலும் இத்திருமணத்தில் அப்பெண்ணின் உறவினர்களையும், நண்பர்களையும் கலந்து கொள்ளச் செய்ததுடன் தன்னுடைய தோழிகள், குடும்பத்தினரையும் கலந்து கொள்ளச் செய்து அசத்தியுள்ளார்.

இத்திருமணத்தில் கலந்து கொண்ட பெண் ஒருவர் கூறும் போது, சவுதியர்களின் உண்மையான நேசம் இது தான், அவர்கள் உதவுவதற்கு நாடுகளையோ நிறங்களையோ மதங்களையோ பார்ப்பதில்லை ஆனால் ஓரு சிலர் இழைக்கும் அநீதிகளை மட்டும் போட்டு போட்டுக்கொண்டு பரப்பி சவுதியர்கள் மீது தவறான எண்ணம் நிலவச்செய்கின்றனர் என ஆதங்கப்பட்டார்.

இதே பணிப்பெண் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தபோதும் மிகுந்த அக்கரையுடன் அவரை கவனித்துக் கொண்டதுடன் சிறப்பு மருத்துவர்களை கொண்டும் அவருக்கு உயரிய சிகிச்சைகளை கிடைக்கச் செய்ததுடன் தேவையேற்படின் தொடர்ந்து சிகிச்சையளிக்கவும் உறுதியளித்துள்ளதாகவும் இன்னொரு தோழி தெரிவித்தார்.

தமிழில்: நம்ம ஊரான்

2 comments:

  1. அருமையான பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமையான பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.