![]() |
| கோப்புப்படம் |
திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கை, சார்ஜா, துபை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு நேரடிப் போக்குவரத்தும், மேலும் பிற நாடுகளுக்கு மாற்று விமானப் போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது.
திருச்சியில் விமான ஓடுதளம் நீட்டிப்பு செய்யப்படாத காரணத்தால், பல வெளிநாட்டு விமான நிறுவனங்கள் திருச்சியில் போக்குவரத்தை தொடங்க முடியாத நிலையில் உள்ளன. ஆனாலும், பயணிகள் போக்குவரத்திலும், சரக்குகள் கையாள்வதிலும் திருச்சி விமான நிலையம் தொடர்ந்து முன்னேறி வருகிறது.
தினசரி சுமார் 4,500 வெளிநாட்டுப் பயணிகள் திருச்சிக்கு வருகின்றனர். இதன்படி, 2015-16 நிதியாண்டில் திருச்சி விமான நிலையத்தை பயன்படுத்திய வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை 11,49,775. உள்நாட்டுப் பயணிகள் எண்ணிக்கை 1,47,437.
2016-17-ம் ஆண்டில் வெளிநாட்டு பயணிகள் 11,90,577 பேரும், உள்நாட்டுப் பயணிகள் 1,69,097 பேரும் பயன்படுத்தியுள்ளனர். அதாவது, வெளிநாட்டு பயணிகள் 40,802 பேரும், உள்நாட்டுப் பயணிகள் 21,660 பேரும் கூடுதலாக பயன்படுத்தியுள்ளனர் என இந்திய விமான நிலைய ஆணையக் குழும புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சார்ஜா விமானம் மீண்டும் அறிமுகம், ஏர்கார்னிவெல் உள்நாட்டு விமானப் போக்குவரத்து, ஜெட் ஏர்வேஸின் கூடுதல் போக்குவரத்து உள்ளிட்டவையே பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக சுட்டிக் காட்டப்படுகிறது.
நிலையத்தில் விமான ஓடுதளம் நீட்டிக்கப்பட்டால், பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமானப் போக்குவரத்து குறித்து ஆய்வு மாணவர் உபதுல்லா கூறியது: நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள ஓடுதள நீட்டிப்பு தடை காரணமாக, ஏர் அரேபியன், சில்க் ஏர்வேஸ் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு விமான நிறுவனங்களால் திருச்சியில் கால் பதிக்க இயலவில்லை. ஓடுதளம் நீட்டிக்கப்பட்டால், திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் வளர்ச்சி மிக மிக அதிகளவில் இருக்கும். அதுபோலவே சரக்குப் போக்குவரத்திலும் பிரத்யேக விமானங்கள் இல்லாத நிலையிலும் பயணிகள் விமானங்கள் மூலமே மாதம் 4,500 டன்களுக்கும் அதிமாக சரக்குகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்றார்.
நன்றி: தினமணி

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.