.

Pages

Thursday, September 14, 2017

அதிராம்பட்டினத்தில் 2 ம் கட்டமாக டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரம் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.14
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை உத்தரவின் பேரில், மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் சுப்பிரமணி அறிவுறுத்தலின் பேரில், சுகாதாரத்துறை அலுவலர்கள், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் 2 ம் கட்டமாக டெங்கு நோய் தடுப்புப் பணிகள் புதன்கிழமை மேற்கொண்டனர்.

அதிராம்பட்டினத்தில் முதல் கட்டமாக, கடந்த ( செப். 6 ) புதன்கிழமை டெங்கு நோய் தடுப்பு பணிகள் நடந்தது. இப்பணிகளை மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் சுப்பிரமணி ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில், 2 ம் கட்டமாக டெங்கு நோய் தடுப்புப் பணிகள் இன்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இதில், நடுத்தெரு, மேலத்தெரு, கீழத்தெரு, ஆஸ்பத்திரி தெரு, புதுமனைத் தெரு, சி.எம்.பி லேன், காலியார் தெரு, வெற்றிலைக்காரத் தெரு, நெசவுக்காரத் தெரு, சேதுரோடு, தரகர் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடு, வீடாகச் சென்று அங்குள்ள மக்களுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர். மேலும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. மேலத்தெரு பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதில் 60 பேர் கலந்துகொண்டனர். முகாமில், நில வேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இதில், 120 பேர் பயனடைந்தனர்.

வட்டார மருத்துவ அலுவலர் ஜி.அறிவழகன் மேற்பார்வையில், 60 டெங்கு தடுப்பு களப்பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் நகர் முழுவதும் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இப்பணியில், ராஜாமடம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் செந்தில்குமார், அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ், வட்டார மேர்பார்வையார் ஆர். அண்ணாதுரை, சுகாதார ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், முத்துசாமி, வெங்கடேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.