அதிராம்பட்டினம், செப்.18
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது.
பள்ளிச்செயலர் எஸ்.ஜே அபுல் ஹசன் வழிகாட்டுதலின் பேரில், பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.எல் அஸ்ரப் அலி முகாம் ஏற்பாடு செய்தார். முகாமில் சிறப்பு அழைப்பாளராக, காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் கலந்துகொண்டு டெங்கு நோய் தடுப்பு விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். முகாமில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளி மாணவர்கள் 1000 பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
முன்னதாக பள்ளி முதுகலை ஆசிரியர் ஆ.அஜ்முதீன் வரவேற்றுப்பேசினார். முகாம் முடிவில் பள்ளி ஆசிரியர் யு.உமர் பாருக் நன்றி கூறினார். இதன் பின்னர், பள்ளி தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், ஜூனியர் ரெட் கிராஸ் ஆகிய அமைப்புகளின் மாணவர்கள் பள்ளி வளாக தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
முகாமில், பள்ளி ஆசிரியர்கள், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர் ஆர். ஆறுமுகம், செயலர் டி.முகமது நவாஸ்கான், பொருளாளர் இசட். அகமது மன்சூர் உள்ளிட்ட ரோட்டரி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது.
பள்ளிச்செயலர் எஸ்.ஜே அபுல் ஹசன் வழிகாட்டுதலின் பேரில், பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.எல் அஸ்ரப் அலி முகாம் ஏற்பாடு செய்தார். முகாமில் சிறப்பு அழைப்பாளராக, காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் கலந்துகொண்டு டெங்கு நோய் தடுப்பு விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். முகாமில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளி மாணவர்கள் 1000 பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
முன்னதாக பள்ளி முதுகலை ஆசிரியர் ஆ.அஜ்முதீன் வரவேற்றுப்பேசினார். முகாம் முடிவில் பள்ளி ஆசிரியர் யு.உமர் பாருக் நன்றி கூறினார். இதன் பின்னர், பள்ளி தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், ஜூனியர் ரெட் கிராஸ் ஆகிய அமைப்புகளின் மாணவர்கள் பள்ளி வளாக தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
முகாமில், பள்ளி ஆசிரியர்கள், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர் ஆர். ஆறுமுகம், செயலர் டி.முகமது நவாஸ்கான், பொருளாளர் இசட். அகமது மன்சூர் உள்ளிட்ட ரோட்டரி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.