.

Pages

Tuesday, September 26, 2017

துபையில் பைலட் இல்லாமல் பறக்கும் டேக்ஸி ~ சோதனை ஓட்டம் வெற்றி !

அதிரை நியூஸ்: செப். 26
உலகின் முதன்முதலாக, துபையில் பைலட் இல்லாமல் பறக்கும் 2 இருக்கைகள் கொண்ட தானியங்கி டேக்ஸி வெற்றிகரமாக 'துபை ஜூமைரா பீச் ரெஸிடென்ஸ் ஏரியா மற்றும் ஜூமைரா பீச் பார்க் பகுதிகளில் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.

ஜெர்மனியின் Volocopter எனும் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தானியங்கி பறக்கும் டேக்ஸிகள் 30 நிமிடத்திற்கு 50 km/h முதல் 100 km/h வரை பறக்கும் தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில சோதனை ஓட்டங்களுக்குப் பின் இவை பொதுமக்களின் போக்குவரத்திற்கு கொண்டு வரப்படும்.

துபை பஸ், மெட்ரோ, டேக்ஸிக்கள், படகு போன்ற போக்குவரத்துகளுள் ஒன்றாக தானியங்கி பறக்கும் டேக்ஸியும் இணைக்கப்படும் என்றும் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தின் மூலம் இயக்கப்படும் இந்த பறக்கும் டேக்ஸியை 'ஆப்' AAP மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் துபை போக்குவரத்து துறை (RTA) அறிவித்துள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.