கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு முன் 6 மாதப் பெண் குழந்தையாக இருந்த ஒரு பெண் குழந்தை, தஞ்சை பெரிய கோயில் அருகிலிருந்து குழந்தையை கடத்தி விற்பனை செய்யும் பெண் ஒருவரால் கடத்தி கேரளாவுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், வாண்டூர் காவல் துறையினரால் அந்தப் பெண் குழந்தை 2016-இல் மீட்கப்பட்டது. பின்னர், மலப்புரம் குழந்தைகள் நலக் குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தற்போது குழந்தைகள் இல்லத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளது. அந்த பெண் குழந்தைக்கு யாழினி என்று காப்பக நிர்வாகிகள் பெயர் சூட்டியுள்ளனர்.
முறைப்படி குழந்தையை வேறு தகுதியான தம்பதியினருக்கு தத்துக் கொடுக்கவோ அல்லது ஆதரவற்றோர் என பிறப்பு சான்றிதல் பதிவேற்றம் செய்ய வேண்டுமானால், அந்த குழந்தை தொலைந்து போன இடத்தில் உள்ள வட்டாட்சியர் மூலமாக சான்று பெறவேண்டும். அதற்காக அந்த குழந்தையை பறிகொடுத்தவர்கள் பற்றிய விபரங்களை பொதுமக்களிடம் தெரிவித்து, அக்குழந்தை குறித்த விபரங்களை பெறக்கோரி கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைதுள்ளனர்.
தஞ்சையில் இருந்து கடத்தப்பட்ட யாழினியின் பெற்றோர் அல்லது உறவினர்கள் யாரும் குழந்தையைத் தவறவிட்டு இருந்தால், அதற்கான உரிய ஆவணங்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு 30 நாள்களுக்குள் தகவல் தெரிவிக்கமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், விவரங்களுக்கு 0422-2300305 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், வாண்டூர் காவல் துறையினரால் அந்தப் பெண் குழந்தை 2016-இல் மீட்கப்பட்டது. பின்னர், மலப்புரம் குழந்தைகள் நலக் குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தற்போது குழந்தைகள் இல்லத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளது. அந்த பெண் குழந்தைக்கு யாழினி என்று காப்பக நிர்வாகிகள் பெயர் சூட்டியுள்ளனர்.
முறைப்படி குழந்தையை வேறு தகுதியான தம்பதியினருக்கு தத்துக் கொடுக்கவோ அல்லது ஆதரவற்றோர் என பிறப்பு சான்றிதல் பதிவேற்றம் செய்ய வேண்டுமானால், அந்த குழந்தை தொலைந்து போன இடத்தில் உள்ள வட்டாட்சியர் மூலமாக சான்று பெறவேண்டும். அதற்காக அந்த குழந்தையை பறிகொடுத்தவர்கள் பற்றிய விபரங்களை பொதுமக்களிடம் தெரிவித்து, அக்குழந்தை குறித்த விபரங்களை பெறக்கோரி கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைதுள்ளனர்.
தஞ்சையில் இருந்து கடத்தப்பட்ட யாழினியின் பெற்றோர் அல்லது உறவினர்கள் யாரும் குழந்தையைத் தவறவிட்டு இருந்தால், அதற்கான உரிய ஆவணங்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு 30 நாள்களுக்குள் தகவல் தெரிவிக்கமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், விவரங்களுக்கு 0422-2300305 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.