அதிராம்பட்டினம், செப். 22
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் சிகிச்சைக்காக நோயாளிகள் வருகை வழக்கத்திற்கு மாறாக அதிகமாகக் காணப்படுகிறது. தினமும் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில், அதிராம்பட்டினத்தில் அதிகபட்சமாக 36 பேருக்கு டெங்கு அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் திருச்சி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர். இவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. சிகிச்சை எடுத்து வருபவர்களில், மேலத்தெரு, புதுமனைத்தெரு, பெரிய நெசவுத்தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளானது தெரிய வந்துள்ளது. இதில், குழந்தைகள் முதல் 20 வயது வரை உள்ளவர்கள் அதிகமானோர் ஆவார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் எம்.எஸ்.டி சிராஜுதீன் கூறியது;
'கடந்த சில மாதங்களாக அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதிகளில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு அதிகமானோர் காய்ச்சல் நோயால் பாதிப்படைதுள்ளனர். சாலையெங்கும் சிதறிக்காணப்படும் குப்பை, கூளங்கள், முறையான வடிகால் வசதி இல்லாததால், ஆங்காங்கே தேங்கிக் காணப்படும் கழிவு நீர், உடைந்த குடிநீர் குழாய்களை சரிசெய்வது கிடையாது, நீர் தேக்கத் தொட்டிகளை 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்வது கிடையாது, குடிநீரில் குளோரினேசன் கலந்து விநியோகம் செய்வது கிடையாது உள்ளிட்ட காரணங்களால் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது' என்றார்.
அதிராம்பட்டினம் பகுதிகளில் சுகாதரப் பணிகளை மேற்கொண்டு வரும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறியது;
'கடந்த சில நாட்களாக, மாவட்ட பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில், காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாங்கள் அதிராம்பட்டினத்தில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்த பல்வேறு பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அதிராம்பட்டினம் பகுதிகளின் குடியிருப்புப் பகுதிகளில் தற்காலிக களப்பணியாளர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நீர் தேக்கி வைத்திருக்கும் பாத்திரங்கள், நீர் தேக்கத் தொட்டிகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம்.
மேலும், நிலவேம்பு குடிநீர் விநியோகம், டெங்கு நோய் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. காய்ச்சால் பாதிப்பு இருந்தால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்' என்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் சிகிச்சைக்காக நோயாளிகள் வருகை வழக்கத்திற்கு மாறாக அதிகமாகக் காணப்படுகிறது. தினமும் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில், அதிராம்பட்டினத்தில் அதிகபட்சமாக 36 பேருக்கு டெங்கு அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் திருச்சி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர். இவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. சிகிச்சை எடுத்து வருபவர்களில், மேலத்தெரு, புதுமனைத்தெரு, பெரிய நெசவுத்தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளானது தெரிய வந்துள்ளது. இதில், குழந்தைகள் முதல் 20 வயது வரை உள்ளவர்கள் அதிகமானோர் ஆவார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் எம்.எஸ்.டி சிராஜுதீன் கூறியது;
'கடந்த சில மாதங்களாக அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதிகளில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு அதிகமானோர் காய்ச்சல் நோயால் பாதிப்படைதுள்ளனர். சாலையெங்கும் சிதறிக்காணப்படும் குப்பை, கூளங்கள், முறையான வடிகால் வசதி இல்லாததால், ஆங்காங்கே தேங்கிக் காணப்படும் கழிவு நீர், உடைந்த குடிநீர் குழாய்களை சரிசெய்வது கிடையாது, நீர் தேக்கத் தொட்டிகளை 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்வது கிடையாது, குடிநீரில் குளோரினேசன் கலந்து விநியோகம் செய்வது கிடையாது உள்ளிட்ட காரணங்களால் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது' என்றார்.
அதிராம்பட்டினம் பகுதிகளில் சுகாதரப் பணிகளை மேற்கொண்டு வரும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறியது;
'கடந்த சில நாட்களாக, மாவட்ட பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில், காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாங்கள் அதிராம்பட்டினத்தில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்த பல்வேறு பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அதிராம்பட்டினம் பகுதிகளின் குடியிருப்புப் பகுதிகளில் தற்காலிக களப்பணியாளர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நீர் தேக்கி வைத்திருக்கும் பாத்திரங்கள், நீர் தேக்கத் தொட்டிகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம்.
மேலும், நிலவேம்பு குடிநீர் விநியோகம், டெங்கு நோய் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. காய்ச்சால் பாதிப்பு இருந்தால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்' என்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.