.

Pages

Thursday, September 14, 2017

சவுதியில் இன்டெர்நெட் தொலைபேசி அழைப்புகளுக்கான தடை நீக்கம் !

அதிரை நியூஸ்: செப்.14
சவுதியில் இன்டெர்நெட் இணைப்பு வழியாக தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதாக தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் அப்துல்லாஹ் அல் சவாஹா அவர்கள் அறிவித்துள்ளார்.

சவுதி தொலைத்தொடர்புத்துறை மற்றும் இன்டெர்நெட் அழைப்புகளை வழங்கும் நிறுவனங்களுக்கிடையே ஏற்பட்ட புரிந்துணர்வை அடுத்து தடை நீக்கம் அமுலுக்கு வந்துள்ளது.

இன்டெர்நெட் வழி தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் தரமான மற்றும் தடங்கலற்ற ஆடியோ வீடியோ அழைப்புக்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவும் சம்மதித்துள்ளன.

இனி சவுதிவாழ் அன்பர்கள் வாட்ஸப், ஸ்கைப், வைபர், ஐஎம்ஓ, வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களின் வழியாக தொடர்பு கொண்டு பேசலாம்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.