அதிரை நியூஸ்: செப்.17
தற்போது உயிர் வாழ்பவர்களிலேயே மிகவும் வயதான பெண் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான 'வயலெட் மோசே பிரவுன்' என்றும் 'Aunt V' என சுருக்கமாகவும் என்றழைக்கப்பட்ட 117 வயதுடைய முதிய பெண்மணி மறைந்தார். இவர் 1900 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் நாள் பிறந்தவர் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள் இறந்தார்.
இவருக்கு முன் 1899 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் நாள் பிறந்து 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி அன்று 117 வது வயதில் மறைந்த, 3 நூற்றாண்டுகள் கண்ட, இத்தாலியின் எம்மா மொரானோவின் (Emma Morano) இறப்பை அடுத்து மூதாட்டி வயலெட் அவர்கள் வாழும் வயதான பெண்ணாக அறிவிக்கப்பட்டிருந்தார்.
இங்கிலாந்திடமிருந்து விடுதலை பெற்ற நாடுகள் காமன்வெல்த் நாடுகள் என்றழைக்கப்படுகின்றன. காமன்வெல்த் நாடுகளின் உறுப்புநாடுகளில் ஒன்று ஜமைக்கா என்பதாலும், மகாராணி விக்டோரியா காலத்திலும் வாழ்ந்து தன்னுடைய காலத்திலும் வாழும் வரலாற்றின் மிஞ்சமாக வாழும் பெண் என்பதாலும் தற்போதைய மகாராணி எலிசபெத் II இவருக்கு சிறப்பு வாழ்த்து மடலை அனுப்பி சிறப்பித்திருந்தார்.
அடிமை வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்ற கடைசி தலைமுறையை சேர்ந்த இவர் தன் இளம் வயதில் கரும்பு தோட்ட ஊழியராகவும், வீட்டுப் பணிப்பெண்ணாகவும் இருந்து பின்பு தனது கிராமத்தில் இருந்த ஒரே ரொட்டிக்கடை மற்றும் சொந்த வீட்டின் உரிமையாளராகவும் உயர்ந்தார்.
Source: Metro.co.uk
தமிழில்: நம்ம ஊரான்
தற்போது உயிர் வாழ்பவர்களிலேயே மிகவும் வயதான பெண் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான 'வயலெட் மோசே பிரவுன்' என்றும் 'Aunt V' என சுருக்கமாகவும் என்றழைக்கப்பட்ட 117 வயதுடைய முதிய பெண்மணி மறைந்தார். இவர் 1900 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் நாள் பிறந்தவர் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள் இறந்தார்.
இவருக்கு முன் 1899 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் நாள் பிறந்து 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி அன்று 117 வது வயதில் மறைந்த, 3 நூற்றாண்டுகள் கண்ட, இத்தாலியின் எம்மா மொரானோவின் (Emma Morano) இறப்பை அடுத்து மூதாட்டி வயலெட் அவர்கள் வாழும் வயதான பெண்ணாக அறிவிக்கப்பட்டிருந்தார்.
இங்கிலாந்திடமிருந்து விடுதலை பெற்ற நாடுகள் காமன்வெல்த் நாடுகள் என்றழைக்கப்படுகின்றன. காமன்வெல்த் நாடுகளின் உறுப்புநாடுகளில் ஒன்று ஜமைக்கா என்பதாலும், மகாராணி விக்டோரியா காலத்திலும் வாழ்ந்து தன்னுடைய காலத்திலும் வாழும் வரலாற்றின் மிஞ்சமாக வாழும் பெண் என்பதாலும் தற்போதைய மகாராணி எலிசபெத் II இவருக்கு சிறப்பு வாழ்த்து மடலை அனுப்பி சிறப்பித்திருந்தார்.
அடிமை வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்ற கடைசி தலைமுறையை சேர்ந்த இவர் தன் இளம் வயதில் கரும்பு தோட்ட ஊழியராகவும், வீட்டுப் பணிப்பெண்ணாகவும் இருந்து பின்பு தனது கிராமத்தில் இருந்த ஒரே ரொட்டிக்கடை மற்றும் சொந்த வீட்டின் உரிமையாளராகவும் உயர்ந்தார்.
Source: Metro.co.uk
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.