.

Pages

Monday, September 18, 2017

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ரூ.5.10 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் !

பட்டுக்கோட்டை, செப்.18
பட்டுக்கோட்டையில் ரூ.5.10 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி மற்றும் பட்டுக்கோட்டை பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் அவர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.அண்ணாதுரை இன்று (18.09.2017) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ரூ.5.10 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்படவுள்ளது.

முதல் கட்டமாக ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் அவர்களின் மாநிலங்களவை உறுப்பினர் நிதியிலிருந்து அவசர மற்றும் சிறப்பு பிரிவுகள் அடங்கிய புற நோயாளி பகுதி கட்டுவதற்கான பூமி பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டது.  இப்பணியானது 5 மாத காலத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டு என அறிவுறுத்தப்பட்டது.

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் நிதியிலிருந்து டயாலிஸ் கருவி, டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி ஆகியவற்றை பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பார்வையிட்டனர்.

ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் நோயாளிகளின் உறவினர்கள் தங்கும் விடுதி கட்டப்படவுள்ளது. ரூ.4 கோடி மதிப்பீட்டில் முதல் தளத்தில் நோயுடன் பிறந்த குழந்தைகள் கவனிப்பு பிரிவு, ஆண்கள், பெண்கள் வார்டு, இரண்டாம் தளத்தில் அறுசை சிசிச்சை அரங்கம் கட்டப்படவுள்ளது. பின்னர், அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பெற்றெடுத்த 16 தாய்மார்களுக்கு குழந்தைகள் நல பரிசு பெட்டகத்தினை மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் வழங்கினார்.

பின்னர், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நிலவேம்பு குடிநீர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

பட்டுக்கோட்டை நகராட்சியின் சார்பில் கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் மற்றும் கொசு பரவாமல் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பாக வைக்கப்பட்டிருந்ததை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், சட்ட மன்ற உறுப்பினர்கள் சி.வி.சேகர் (பட்டுக்கோட்டை), கோவிந்தராசு (பேராவூரணி), பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஞானசம்பந்தன், சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் ஜெயசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.