.

Pages

Friday, September 15, 2017

பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு ~ நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் !

அதிராம்பட்டினம், செப்.15
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிராம்பட்டினம் துணை கிளை சார்பில், அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு பள்ளித்தாளாளர் வீ. சுப்ரமணியன் தலைமை வகித்தார். அதிராம்பட்டினம் ரெட் கிராஸ் சங்கத் தலைவர் கே. இத்ரீஸ் அகமது, செயலாளர் எம். நிஜாமுதீன், பொருளாளர் எஸ்.ஏ அப்துல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில், சிறப்பு விருந்தினராக இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் ராஜமாணிக்கம் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்து, டெங்கு நோய் தடுப்பு குறித்து மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். முகாமில் 1000 த்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர் ஆர். ஈஸ்வரன், பள்ளி மேலாளர் எஸ். சுப்பையன், அதிராம்பட்டினம் ரெட் கிராஸ் சங்க நிர்வாகிகள் மேஜர் எஸ்.பி கணபதி, என். ஆறுமுகச்சாமி, முத்துக்குமரன், சமியுல்லா, சைஃபுதீன் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.