.

Pages

Tuesday, September 19, 2017

காதிர் முகைதீன் கல்லூரியில் வளாக தூய்மைப் பணி (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.19
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் கல்லூரியில் நேற்று திங்கட்கிழமை தொடங்கி, செப்.21 ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில், டெங்கு தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகித்தல், கல்லூரி வளாகம் தூய்மை செய்தல், விழிப்புணர்வு கருத்தரங்கம், நிலவேம்பு குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

முகாமின் 2 வது நாளான இன்று செவ்வாய்கிழமை காலை, கல்லூரி வளாக தூய்மை பணியில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் ஈடுபட்டனர். கல்லூரிச் செயலர் எஸ்.ஜே அபுல் ஹசன் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார்.

கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் கே. முத்துகுமாரவேல், எம் பழனிவேல், எஸ். சாபிரா பேகம், என்.சேகர் ஆகியோர் மேற்பார்வையில், கல்லூரி வளாகத்தில் கிடந்த குப்பைகள், தேவையற்ற கழிவுகளை மாணவ, மாணவிகள் அகற்றினர்.

இம்முகாமில், கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன், கல்லூரி பேராசிரியர்கள் என்.ஜெயவீரன், டி.லெனின், மேஜர் எஸ்.பி கணபதி, கே. செய்யது அகமது கபீர் உள்பட நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.