தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சியில் காந்தி நகர், மாரியம்மன் கோயில், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் சுகாதார தூய்மை தொடர்பாகவும், டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பொது மக்களுக்கு நில வேம்பு கசாயம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்
அதிராம்பட்டினம் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு உரிய சிகிச்சை அளிக்க வேண்டுமென மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதிராம்பட்டிணம் பேரூராட்சி அலுவலகத்தில் பொது மக்களுடன் டெங்கு நோய் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், தூய்மை கடைப்பிடித்து பராமரிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. அதிராம்பட்டிணம் காந்தி நகர் பகுதியில், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கழிவு நீர் வாய்க்கால் மேம்படுத்தி கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
அப்போது, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ, பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் ம. கோவிந்தராசு, அதிரை பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் ஏ.பிச்சை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.