.

Pages

Wednesday, September 20, 2017

மும்பையில் ஸ்பைஸ்ஜெட் விமானம் ஓடுபாதையிலிருந்து விலகி சேற்றில் சிக்கியது !

அதிரை நியூஸ்: செப்.20
மும்பையில் தற்போது பலத்த பருவமழை பெய்துவருகிறது இதனால் மங்கலான சூழல் நிலவுவதால் பெரும்பாலான விமான போக்குவரத்துக்கள் மும்பையில் இன்று (புதன்) அதிகாலை 5 மணிவரை ரத்து செய்யப்பட்டிருந்தன.

மேலும், வாரனாசியிலிருந்து மும்பை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று மழையின் காரணமாக ஓடுபாதையிலிருந்து விலகி சேற்றுக்குள் சிக்கியதை தொடர்ந்தும் மும்பையில் விமானங்கள் இயங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் தற்காலிகமாக தனது மும்பை தடத்திற்கான அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்துவிட்டது. மழையின் காரணமாகவும், ஸ்பைஸ்ஜெட் விபத்தின் காரணமாக ரத்து செய்யப்பட்ட விமான போக்குவரத்தால் சர்வதேச தடத்தில் இயங்கும் விமான சேவைகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.