.

Pages

Sunday, September 17, 2017

துபாய் ஷேக் ஜாயித் சாலையின் குறுக்கே ஓடிய முதியவர் உயிர் தப்பினார் !

அதிரை நியூஸ்: செப்.17
துபையின் மிக மிக பரப்பரப்பான சாலை ஷேக் ஜாயித் ரோடு, பக்கத்திற்கு 6 லேன்கள் என மொத்தம் 12 லேன்கள் உள்ள இந்த சாலையில் எப்போதும் வாகனப் போக்குவரத்து நிரம்பி வழியும், குறுக்கு புகுந்து கடப்பதென்பது உயிரோடு விளையாடுவதற்குச் சமம்.

இந்த ஷேக் ஜாயித் சாலையில் 60 வயது மதிக்கத்தக்க, வெளிநாட்டிலிருந்து சுற்றுலா வந்திருந்த அரபி ஒருவர் திடீரென 6 லேன்களை குறுக்கே புகுந்து கடந்தவர் பின் சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவரேறி குதித்து மறுபக்கத்திலுள்ள 6 லேன்களையும் சிறுகாயங்களுமின்றி கடந்து சென்றவரை போலீஸார் 'லபக்' என பிடித்துச் சென்றனர் ஆனால் இவர் மீது மோதாமல் இருக்க வேண்டும் என்பதற்காக திடீரென திக்குமுக்காடிய வாகனங்கள் தான் ஒன்றுக்கு ஒன்று இடித்துக் கொண்டு நின்றன, நல்லவேளை எந்த அசம்பாவிதங்களும் நிகழவில்லை.

போலீஸ் விசாரணையில் துபையில் சாலைகளை குறுக்கே சென்று கடக்கக்கூடாது என்ற சட்டம் தனக்குத் தெரியாது என்றவரின் உறவினர்களை ஹோட்டல்களில் இருந்து வரவழைத்து, அவரை இனி தனியே நடமாடவிடக்கூடாது என எச்சரித்து விடுதலை செய்தனர். உயிரும் தப்பி தண்டனையிலிருந்தும் தப்பியது அதிசய நகழ்வே.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.