.

Pages

Friday, September 29, 2017

அதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கி மேலாளருக்கு பாராட்டு ~ வழியனுப்பும் விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், செப். 29
பதவி உயர்வு பெற்று பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட அதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் ஏ. ஹமீத்கானுக்கு பாராட்டு - வழியனுப்பும் விழா.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளராக கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தவர் ஏ.ஹமீத்கான். இந்நிலையில், பதவி உயர்வு பெற்று, திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பாரத ஸ்டேட் வங்கிக் கிளைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, சக பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சார்பில் பாராட்டு மற்றும் வழியனுப்பும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு, வங்கி கிளை புதிய மேலாளர் பிரவின் குமார் தலைமை வகித்தார். விழாவில், அதிரை பேரூர் வர்த்தக சங்கத் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன், முன்னாள் தலைமை ஆசிரியர் ஏ.மகபூப் அலி, வங்கி காசாளர் ஜெயா, பிரேம் நாத், பாண்டியன், நகை மதிப்பீட்டாளர் வாசு, ஜாகிர் உசேன் (ஜே.எஸ்), ராமசாமி, ஜமால் முஹம்மது உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதன்பின்னர் மேலாளர் ஏ. ஹமீத்கான் தனது ஏற்புரையில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

தொடக்கத்தில், வங்கி வர்த்தகத் தொடர்பாளர் ஏ. ஷேக் அப்துல்லாஹ் வரவேற்றுப்பேசினார், விழா முடிவில் நன்றி கூறினார். இவ்விழாவில் வங்கி பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.