.

Pages

Wednesday, September 20, 2017

காதிர் முகைதீன் கல்லூரியில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.20
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் கல்லூரியில் திங்கட்கிழமை தொடங்கி, செப்.21 ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில், டெங்கு தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகித்தல், கல்லூரி வளாகம் தூய்மை செய்தல், நிலவேம்பு குடிநீர் வழங்குதல், விழிப்புணர்வு கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

முகாமின் 3 வது நாளான இன்று புதன்கிழமை காலை, கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை யுனானிப் பிரிவு ஆகியன இணைந்து கல்லூரி மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது.

கல்லூரிச்செயலர் எஸ்.ஜே அபுல் ஹசன் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ஏ. முகமது முகைதீன் முன்னிலை வகித்தார். முகாமில், கல்லூரி மாணவ, மாணவிகள் 2800 பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

தொடக்கத்தில், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலர் (சித்தா பிரிவு) மருத்துவர் இ. அருண் குமார், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை (யுனானிப் பிரிவு) மருத்துவர் சி. ஷெரீன் பேகம் ஆகியோர் கலந்துகொண்டு டெங்கு தடுப்பு விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்கள்.

முகாம் ஏற்பாட்டினை, கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் கே. முத்துகுமாரவேல், எம் பழனிவேல், எஸ். சாபிரா பேகம், என்.சேகர் ஆகியோர் செய்தனர்.

இம்முகாமில், கல்லூரி பேராசிரியர்கள் டி.லெனின், எஸ். ரவீந்தரன், கே. செய்யது அகமது கபீர் உள்பட கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.