அதிராம்பட்டினம், செப். 15
பேரறிஞர் அண்ணாவின் 109 வது பிறந்த நாள் தமிழகமெங்கும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று வெள்ளிக்கிழமை காலை திமுக அதிரை பேரூர் சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலர் இராம. குணசேகரன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ ஏனாதி பாலசுப்பிரமணியம் கட்சி அலுவலகத்தில் திமுக கொடியேற்றி வைத்து, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் கட்சியினர், அதிராம்பட்டினம் திமுக அலுவலகத்திலிருந்து பேரணியாக புறப்பட்டுசென்று, அதிரை ஈஸ்ட் கோஸ்ட் சாலை, காலேஜ் முக்கம், வண்டிப்பேட்டை, பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் ஆகிய 5 இடங்களில் உள்ள திமுக கொடிக்கம்பங்களில் கொடியேற்றி வைத்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில், திமுக மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணை அமைப்பாளர் எஸ்.எச் அஸ்லம், பட்டுக்கோட்டை மேற்கு தொகுதி ஒன்றிய செயலளார் ஏனாதி பா. இராமநாதன், இணைச்செயலாளர் அன்சர்கான்,
துணைச் செயலாளர் தில்லை நாதன், பொருளாளர் கோடி முதலி, மாவட்ட பிரதிநிதி இன்பநாதன், ஒன்றிய பிரதிநிதிகள் அப்துல் ஹலீம், முல்லை மதி, மருதையன், ஒன்றிய சிறுபான்மை நலப்பிரிவு அமைப்பாளர் கே. இத்ரீஸ் அகமது, மகிழங்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் சிவாஜி, மீனவரணி பொறுப்பாளர் கோடி நாகராஜ், அதிரை பேரூர் வார்டு முன்னாள் கவுன்சிலர் முகமது சரீப், அதிரை பேரூர் வார்டு பொறுப்பாளர்கள் நிஜாமுதீன், முத்துராமன், சைஃபுதீன், நியாஸ் அகமது உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டனர்.
பேரறிஞர் அண்ணாவின் 109 வது பிறந்த நாள் தமிழகமெங்கும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று வெள்ளிக்கிழமை காலை திமுக அதிரை பேரூர் சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலர் இராம. குணசேகரன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ ஏனாதி பாலசுப்பிரமணியம் கட்சி அலுவலகத்தில் திமுக கொடியேற்றி வைத்து, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் கட்சியினர், அதிராம்பட்டினம் திமுக அலுவலகத்திலிருந்து பேரணியாக புறப்பட்டுசென்று, அதிரை ஈஸ்ட் கோஸ்ட் சாலை, காலேஜ் முக்கம், வண்டிப்பேட்டை, பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் ஆகிய 5 இடங்களில் உள்ள திமுக கொடிக்கம்பங்களில் கொடியேற்றி வைத்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில், திமுக மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணை அமைப்பாளர் எஸ்.எச் அஸ்லம், பட்டுக்கோட்டை மேற்கு தொகுதி ஒன்றிய செயலளார் ஏனாதி பா. இராமநாதன், இணைச்செயலாளர் அன்சர்கான்,
துணைச் செயலாளர் தில்லை நாதன், பொருளாளர் கோடி முதலி, மாவட்ட பிரதிநிதி இன்பநாதன், ஒன்றிய பிரதிநிதிகள் அப்துல் ஹலீம், முல்லை மதி, மருதையன், ஒன்றிய சிறுபான்மை நலப்பிரிவு அமைப்பாளர் கே. இத்ரீஸ் அகமது, மகிழங்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் சிவாஜி, மீனவரணி பொறுப்பாளர் கோடி நாகராஜ், அதிரை பேரூர் வார்டு முன்னாள் கவுன்சிலர் முகமது சரீப், அதிரை பேரூர் வார்டு பொறுப்பாளர்கள் நிஜாமுதீன், முத்துராமன், சைஃபுதீன், நியாஸ் அகமது உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.