.

Pages

Saturday, September 16, 2017

அதிரையில் ரோட்டரி சங்கம் சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் !

அதிராம்பட்டினம், செப்.16
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றது.

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர் ஆர். ஆறுமுகம் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். செயலர் டி. முகமது நவாஸ்கான், பொருளாளர் இசட். அகமது மன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இம்முகாமில் பயணிகள், பொதுமக்கள் உள்ளிட்ட 200 பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இம்முகாமில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் சாகுல் ஹமீது, மன்சூர் கமால், அய்யாவு, வெங்கடேஷ், கண்ணன், ஹாஜா பகுருதீன், உதய குமார், வைரவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.